×
 

தவெக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மார்க்... நெல்லையில் நின்று விஜயை விளாசித் தள்ளிய நயினார் நாகேந்திரன்...!

தமிழக வெற்றிக்கழக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 சதவீதம் மார்க்: தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் நிறுவப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு ரீல்ஸ்தான்

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியினர் அவருக்கு கயிறு கட்டி பொட்டு வைத்து கொண்டாடினர்.  அதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
சட்டமன்றத்தில் நடந்ததை எல்லாம் நாங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நீங்களும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உலகம் புல்லா உள்ள தமிழர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது நாங்கள் சட்டமன்றத்தில் இருந்தபோதெல்லாம் முன்னாள் அமைச்சர் வேலுவிடம் திருநெல்வேலியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் திமுக நான் பாஜக இருந்த போதிலும் 350 கோடி மதிப்பில் சாலைகள் விரிவாக்க திட்டம் மற்றும் மானூரில் கலைக்கல்லூரி அனைத்தையும் கொடுத்தார்கள்.

முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளுக்கும் அனைத்தையும் செய்து கொடுங்கள் என்று கூறினார். ஆனால் தற்பொழுது உங்க அப்பாகிட்ட போய் கேளுங்க உங்க மாமாவிடம் கேளுங்க என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: நெல்லையில் உச்சக்கட்ட பரபரப்பு... தேவர் சிலை பீடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... போலீஸ் குவிப்பு...!

அவரவர் அவருடைய  மதத்தை வரவேற்பதில் நான் வரவேற்பேன். ஒரு அமைச்சர் நான் கிறிஸ்தவன் என்கிறார்கள் சபாநாயகரும் நான் கிறிஸ்துவன் என்கிறார். இது போன்ற மோசமான சூழல் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேட்டூரில் இரண்டு மாதம் ஆகியும் என்னை தண்ணீர் திறக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தமிழ்நாடு சென்றுவிட்டது என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுன் விடம் நான் கேட்கிறேன். சட்டமன்றத்திற்கு நான் போக வாய்ப்பில்லை. அதனால் நேரடியாக கேட்கிறேன்.

சட்டமன்றத்தில் தேவையில்லாததை பேச வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது.நவகாளி சம்பவத்தைப் பற்றி சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் விவாதிக்க தயாரா. அவர் அப்போதெல்லாம் பிறந்திருக்கவே மாட்டார். சட்டமன்றத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் வேட்பாளராக விஜய் இருப்பார் என அமைச்சர்கள் பேசிக் கொண்டு குறித்த கேள்விக்கு, இது ஒரு நாடகமா நடக்காததை பேசுகிறார்களா. காங்கிரஸ்காரர்கள் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள். அது முதலமைச்சருக்கும் தெரியும். தமிழக அமைச்சர் ராஜேஷ் இந்த கருத்தை கூறியிருக்கிறார் என்றால் அதில் ஒரு ஒன்று இருக்கிறது.


பாஜகவை நாங்கள் மட்டும்தான் நேராக எதிர்க்கிறோம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, நாங்கள் என்ன சிலம்பு சண்டையா போடுகிறோம். ஐ. ஆர்.எஸ். படித்துக்கொண்டு இது கூட தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. இந்த தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு மைனஸ் 80 சதவீதம் மார்க் வழங்குகிறேன்.

தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் நிறுவப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது ரீல்ஸ்தான். தமிழக முழுவதும் சட்ட ஒழுங்கு கஞ்சா போதை பொருள் எல்லா கிராமத்திலும் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதையும் படிங்க: கண் இமைக்கும் நேரத்தில் கோரம்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share