×
 

#BREAKING: கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பு... உச்சகட்ட பாதுகாப்பு...!

இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார்.

கோவை கொடிசியாவில் இன்று இயற்கை விவசாயிகள் மாநாடு தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு அவர் விருது வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடர்ந்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை விடுவிக்கிறார். பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடையவுள்ளனர்.

ஆந்திராவில் விழாவினை முடித்துக் கொண்டு தனி விமான மூலம் பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்தடைந்தார். பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமருக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டு பக்கம் வரவே கூடாது... பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு... கோவையில் பரபரப்பு...!

கொடிசியாவில் இன்று இயற்கை விவசாயிகள் மாநாடு தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு அவர் விருது வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: ஏமாற்றம்... மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு... காரணம் தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share