×
 

தொடர்ந்து 25 ஆண்டுகள்! குஜராத் முதல்வர் முதல் பிரதமர் வரை! அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த மோடி!

இத்தனை ஆண்டுகளாக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், என்னை வளர்த்த இந்த மகத்தான தேசத்தின் முன்னேற்றத்துக்காகவும் பங்களிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, 2001 நவம்பர் 7 அன்று முதல் முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்ற நாளை நினைவு கூர்ந்து, எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். 14 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், 11 ஆண்டுகள் இந்திய பிரதமராகவும் பணியாற்றி, ஆட்சியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி, மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். குஜராத்தை மறுகட்டமைப்பு செய்தது முதல் இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தியது வரை தனது பயணத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

மோடியின் எக்ஸ் பதிவு: "2001 ஆம் ஆண்டு இதே நாளில், நான் முதல் முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றேன். எனக்கு தொடர்ச்சியான ஆசீர்வாதங்களை அளித்து வரும் இந்திய மக்களுக்கு நன்றி. இன்று, அரசாங்கத்தின் தலைவராக 25-ஆம் ஆண்டில் நுழைகிறேன். 

இந்திய மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், என்னை வளர்த்த இந்த மகத்தான தேசத்தின் முன்னேற்றத்துக்காகவும் பங்களிப்பதற்கு முயற்சித்து வருகிறேன்.

இதையும் படிங்க: 2047 வரை மோடி தான் பிரதமர் வேட்பாளர்! அதுதான் இலக்கு! அடித்து சொல்லும் ராஜ்நாத் சிங்!

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் குஜராத் முதல்வர் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்தது. 2001-ல் மிகப்பெரிய நிலநடுக்கம், முந்தைய ஆண்டுகளில் புயல், வறட்சி, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை மாநிலத்தை பாதித்திருந்தன. இந்த சவால்கள், மக்களுக்கு சேவை செய்யவும், குஜராத்தை நம்பிக்கையுடன் மறுகட்டமைப்பு செய்யவும் எனது உறுதியை வலுப்படுத்தின.

பதவியேற்றபோது, என் தாயார் கூறியது நினைவில் உள்ளது: ‘உன் வேலை பற்றி எனக்கு அதிகம் புரியவில்லை, ஆனால் இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். முதலாவது, ஏழைகளுக்கு உழை; இரண்டாவது, ஒருபோதும் லஞ்சம் வாங்காதே.’ நானும், எதைச் செய்தாலும், வரிசையின் கடைசி நபருக்கும் சேவை செய்யும் நோக்கத்துடன் செயல்படுவேன் என மக்களிடம் உறுதியளித்தேன்.

இந்த 25 ஆண்டுகள் அனுபவங்களால் நிரம்பியவை. ஒன்றிணைந்து, நாம் அற்புதமான முன்னேற்றங்களை அடைந்தோம். குஜராத் முதல்வராக பதவியேற்றபோது, மாநிலம் மீண்டும் உயர முடியாது என நம்பப்பட்டது. மக்கள், விவசாயிகள் மின்சார, தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டனர். 

விவசாயம் பாதிக்கப்பட்டு, தொழில்துறை சரிந்திருந்தது. ஆனால், நாம் ஒன்றிணைந்து குஜராத்தை நல்லாட்சியின் ஆற்றல் மையமாக மாற்றினோம். வறட்சி மாநிலம் விவசாயத்தில் முன்னணியானது. தொழில்துறை, உற்பத்தி, வணிகம் வளர்ந்தன. ஊரடங்கு உத்தரவுகள் கடந்த காலமாகின. சமூக உட்கட்டமைப்பு மேம்பட்டது.

2013-ல், 2014 மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். அப்போது, நாடு நம்பிக்கையை இழந்து, ஊழல், கொள்கை முடக்கம், நண்பர்களுக்கு ஆதரவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. உலக அரங்கில் இந்தியா பலவீனமாக கருதப்பட்டது. ஆனால், மக்கள் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு பாஜகவை பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைத்தனர்.

கடந்த 11 ஆண்டுகளில், இந்திய மக்களுடன் இணைந்து பல மாற்றங்களை அடைந்தோம். 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். உலகின் முக்கிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்தது. மிகப்பெரிய சுகாதார, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னோடியாக உள்ளோம். விவசாயிகள் புதுமைகளை மேற்கொண்டு, நாடு தற்சார்பு அடைந்து வருகிறது. விரிவான சீர்திருத்தங்களுடன், இந்தியாவை அனைத்து துறைகளிலும் தற்சார்பு நாடாக மாற்றி வருகிறோம்.

இந்திய மக்களின் தொடர் நம்பிக்கை, அன்புக்கு மீண்டும் நன்றி. நம் நாட்டிற்கு சேவை செய்வது மிக உயரிய கௌரவம். அரசியலமைப்பை வழிகாட்டியாகக் கொண்டு, ‘வளர்ந்த பாரதம்’ என்ற கனவை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்பேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடியின் பதிவு, அவரது அரசியல் பயணத்தின் முக்கிய தருணங்களை எடுத்துக்காட்டுகிறது. 2001-ல் குஜராத் நிலநடுக்கம், வறட்சி, புயல் போன்ற சவால்களுக்கு மத்தியில் முதல்வராக பொறுப்பேற்று, மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்தார். 2014-ல் பிரதமராக பொறுப்பேற்று, இந்தியாவை பொருளாதார, சமூக முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றார். இந்த பதிவு, மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது அர்ப்பணிப்பையும், ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கையும் வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க: இத மட்டும் பண்ணிட்டா போதும்! இனி இந்தியா டாப்பு தான்! நிதின் கட்கரி புது ஐடியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share