×
 

சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா களமிறங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, கட்சித் தலைவர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

அவரது வேட்பாளர் நியமனம் மற்றும் பிரசார நடவடிக்கைகள், வில்லிவாக்கம் தொகுதியை 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முக்கிய போட்டி மையங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன. இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வேட்பாளரின் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படுகிறதா அல்லது நிராகரிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்கப்பட்டுள்ளது.. இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் வேப்பு மனுவை ஏற்கக்கூடாது என்று சுயேச்சை வேட்பாளர்கள் கூச்சலிட்டனர். FD-யில் இருந்த பணத்தை மறைத்து விட்டார் என்றும் தனது மனைவியின் பெயரில் இருந்த நிறுவனங்களை மறைத்து விட்டார் என்றும் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: #BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!

இதை அடுத்து வேட்பு மனு பரிசீலனை செய்யும் இடத்திற்கு ஆதவ் அர்ஜுனா சென்றார். பிறகு எலக்சன் அப்சர்வர் வரும்வரை ஆதவ் அர்ஜுனாவின் மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு முழுமையான பரிசீலனை செய்யப்பட்டு எவ்வித குறைபாடுகளும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: #BREAKING: விசில் போடு..! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு ஏற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share