பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!
பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.நெடுஞ்சாலைத்துறையில் பேட்ச் வொர்க் என்பதில் தான் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறையில் இனி பினாமி பெயரில் டெண்டர் கிடையாது என்றும் கூறினார்.
பொதுப்பணித்துறையில் போலி பில் போடுவது நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் மேலும் அனைத்து டெண்டர்களையும் நிறுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார். 60 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் நிர்வாக மாற்றத்தை பார்க்கலாம் என்றார். வீடு கட்ட சிஎம்டிஏவில் சதுர அடிக்கு ரூ.40 வசூலிப்பதை தடுத்துள்ளோம் என்றும் டாஸ்மாக்கில் அமைச்சருக்கான FUND, அமைச்சர் குடும்ப FUND ஒழிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எங்குமே தற்போது மணல் கடத்தல் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் ஆற்று மணல் கடத்தல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார். தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும் என்றும் இருமொழிக் கொள்கை என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!
உள்துறை செயலகத்தின் அறிக்கை அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமை தாங்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஐ.ஏஎஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேர்மையாக முடிவெடுக்க முதல்வர் விஜய் ஆணையிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!