“போற இடமெல்லாம் காவு வாங்குறான்... ரசிகர்களை சாகடிக்க கட்சி எதுக்கு?...” விஜயை வறுத்தெடுத்த விந்தியா...!
நடிகர் விஜயின் அரசியல் கூட்டம் எல்லாம் அனுதாபக் கூட்டமாக மாறி வருவதாகவும் தமிழகத்தில் விவசாயம் பார்த்து இறந்தவர்கள் கூட குறைவு ஆனால் விஜயை பார்த்து இறந்தவர்கள் அதிகம் என நடிகை விந்தியா விமர்சனம்
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆதரித்து திரைப்பட நடிகையும் அதிமுக பேச்சாளருமான விந்தியா திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ஏரிகளின் நகரம் திருவள்ளூர் எனவும், திமுக ஆட்சியில் விலை ஏரி ஏரி ஏழைகளின் நகரமாக மாறிவிட்டது எனவும், யாருக்கு வெற்றியை தர வேண்டும் என்பது இங்குள்ள வீரராகப் பெருமாளுக்கு தெரியும் என்றார்.
விவசாயி மகன் எடப்பாடிக்கா? வெட்டி விளம்பர ஸ்டாலினுக்கா எனவும்,வெற்றி பெற போவது அதிமுக தான் என்றார். திமுக ஆட்சியை முடியும் போது மக்கள் திமுக வெறுப்பது சகஜம் தான், அது வரலாறு, ஆனால் இந்த 5 ஆண்டில் திமுக ஆட்சி மக்கள் மட்டும் வெறுக்கவில்லை திமுகவினரே வெறுக்கிறார்கள் எனவும், இதுதான் திமுகவின் கடைசித் தேர்தல், திமுக கட்சி செத்துப் போய்விட்டது என அவர்கள் விடுத்துள்ள வேட்பாளர் பட்டியலை பார்க்கும் போதே தெரிவதாகவும் கூறினார்.
சிட்டிங் எம்எல்ஏக்கள் 13 பேருக்கு சீட் வழங்கவில்லை, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற 19 பேருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏனென்றால் திமுகவில் ஆள் இல்லை, கட்சியிலிருந்து 2 மாதங்களுக்குள் ஆகாமல் உள்ள 5 பேருக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது .ஆனால் 50 ஆண்டுகளாக கருணாநிதி முதல் இன்பநிதி வரை கொத்தடிமைகளாக வாழ்ந்து அவர்களின் துணிகளை துவைத்த திமுககாரர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை என்றார்.
இதையும் படிங்க: “உன்ன எவன்டா வர சொன்னா...” - விஜயை ஒருமையில் சாடிய சீமான்... ஷாக்கில் தவெக தொண்டர்கள்...!
இவர்களின் பிழைப்பைப் பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது எனவும், நாம் வாங்கும் 10 ரூபாய் பேட்டரியில் கூட பிளஸ் மைனஸ் இருப்பதாகவும், ஆனால் திமுகவை நம்பி வாழும் உபிஸ்களுக்கு மைனஸ் மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதுதான் கருணாநிதியின் வாழ்க்கையில் பிளஸ் கருணாநிதி குடும்பத்திற்கு பிளஸ் எனவும் கூறிய விந்தியா, திமுகவை விட்டு வெளியில் எம்ஜிஆர் வரும் போதே வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, கொள்கை நல்லாட்சி என எல்லா நல்ல விஷயங்களை விட்டு வெளியில் வந்து விட்டார் என்றார்.
கருணாநிதியின் கொத்தடிமைங்கள் மட்டும் அங்கேயே இருந்தனர் எனவும்,பழைய கொத்தடிமைகளை ஸ்டாலின் காலி செய்து புதிய கொத்தடிமைகளை ஜால்ரா அடிப்பதற்காக கட்சியில் சேர்த்து வைத்துள்ளார் என்றும் கூறினார். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் "அ" என்ற எழுத்து மட்டுமே வித்தியாசம்,ஆனால் அந்த எழுத்து தான் அன்பு, அரவணைப்பு, அறிவு, அற்புதம், அங்கீகாரம், அதிகாரத்தில் பங்கு என மொத்தமாக அதிமுகவில் தான் உள்ளது என்றார்.
அதிமுக தான் தமிழகத்தின் அடையாளம், நல்லாட்சியின் விலாசம் எனவும், தமிழக மக்களோடு தேர்வு தீய சக்தி திமுகவுக்கு தீர்வு எனவும் விமர்சித்தார். தேர்தல் வந்தால் வகைவகையாக விளம்பரங்களை கொடுத்து ஏமாற்றுவார்கள் திமுகவும் ஸ்டாலினும் எனவும், கடந்த தேர்தலில் விடியல் தரணும் விடியல் தரணும் விடியல் என கூறியதாகவும்,
அவரது குடும்பத்திற்கு மட்டும்தான் விடியல் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது எனவும், தமிழ்நாடு தலைகுனியாது என விளம்பரம் தருகிறார்கள் ஆனால் இந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு எங்கே தலை நிமிர்ந்தது, தலைகுனிவந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை, வேங்கைவயல் அசுத்தம் கலந்தது, கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 63 பேர், மரக்காணத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் ராணுவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கிய தமிழ்நாடு தலை குனிந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.
திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம் மருத்துவர்கள் செவிலியர்கள், அரசு ஊழியர்கள் டாஸ்மார்க் ஊழியர்கள் கூட போராட்டம் கூகுள் மேப் இருந்தால் டிராபிக் அப்டேட் இருக்கோ இல்லையோ போராட்டத்துக்கான அப்டேட் கிடைப்பதாகவும் அவர் கூறினார். கேவலமாக உள்ள இந்த நிலையில் தலை குனிந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.
மின்சாரத்தை விட மின் கட்டண பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. 5 ஆண்டுகளில் 4 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்த்தியும் மின்வாரியத்தில் வேலை பார்க்க ஆள் இல்லை, 100 பேர் பார்க்க வேண்டிய வேலையை 5 பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை பார்த்து தமிழ்நாடு தலை குனிந்து கொண்டு தான் இருக்கிறது என சாடினார்.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி குரூப்-2 தேர்வை கூட நடத்த முடியாமல் தவிக்கிறது இந்த ஆளத் தெரியாத அரசாங்கம் இதைப் பார்த்து தமிழ்நாடு தலை குனிந்து கொண்டு தான் இருக்கிறது எனவும், சிறுவர்கள் கஞ்சா போதையில் இருக்கிறார்கள் வடமாநில இளைஞர்களை வெட்டி ஷேர் போடுகிறார்கள் எனவும், ஒரு எம்எல்ஏ கிட்னி விற்கிறார், ஒரு எம்எல்ஏ ரிப்போர்டரை அடிக்கிறார், ஒரு எம்எல்ஏ பெண்களை தாக்குவதாகவும் இதை எல்லாம் பொம்மை போல் பார்த்து கொண்டிருக்கும் பொம்மை முதல்வரை பார்த்து தமிழ்நாடு தலை குனிந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.
மக்களின் பிரச்சினைகளை பார்க்காமல் ஸ்டாலின் சினிமா விமர்சனம் எழுதி வருவதாகவும் , தமிழனும் தமிழ்நாடு ஒரு நிமிடம் யோசித்தால் இந்த ஆட்சி மட்டும் இல்லை, திமுகவே காணாமல் போய்விடும் என்றார். 50 வருடம் காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்ட காங்கிரஸோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள் எனவும்,
பாட்ஷா படத்தில் ரஜினி அருகிலேயே ஒரு நாய் இருக்கும் அது எதற்கு என்று யாருக்குமே தெரியாது, அது போல தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் எதற்கு இருக்கிறது என திமுகவுக்கும் தெரியாது காங்கிரசுக்கும் தெரியாது என விமர்சித்தார். விடுதலை சிறுத்தை கட்சி நம்பர் ஒன் கொத்தடிமை. தலித் மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் கோல்டன் பீச்சில் உள்ள பொம்மை போல் கையில் குச்சியுடன் அமைதியாக நிற்பார் திருமாவளவன் எனவும் கடுமையாக விமர்சித்தார்.
ஈரானில் குண்டு போட்டாலும் உக்கரைனில் போர் வந்தாலோ கொந்தளித்து வருவார் திருமா. திருமாவளவன் முரட்டு பீஸ் என்றால் கமலஹாசன் முத்தி போன பீஸ் எனவும், அவர் எதற்காக கூட்டணியில் இருக்கிறார் என யாருக்கும் தெரியாது என்றார். வாரிசு அரசியலை எதிர்த்து டார்ச் லைட்டால் டிவி எல்லாம் உடைத்து கட்சி ஆரம்பித்த கமலஹாசன், கடைசியில் திமுகவிலிருந்து சேருவார்கள் தெரிந்திருந்தால் ஒரு டிவியும் ஒரு டார்ச்சும் உடையாமல் மிச்சமாகி இருக்கும் என்றார்
தமிழகத்தில் நடக்கும் அநீதிகளை கேட்காத கமலஹாசன் ஈரானில் நடக்கும் போர் குறித்து டிரம்புக்கு கடிதம் எழுதுகிறார் எனவும், மதிமுக என்றாலே மானங்கெட்ட திமுக எனவும் வாரிசு அரசியலை எதிர்த்து கருணாநிதியை எதிர்த்து கட்சி ஆரம்பித்தவர் வைகோ, ஆனால் இப்போது அவருடைய மகனுக்காக ஒரு எம்பி சீட்டுக்காக அவருடைய தொண்டர்களையும் அடகு வைத்து விட்டார் எனவும், தொண்டர்கள் முதுகிலும் குத்திவிட்டார் எனவும், வைகோ என கூப்பிடுவதற்கு பதிலாக அரசியல் சைக்கோ என கூப்பிடலாம் என விமர்சித்தார்.
கம்யூனிஸ்டுளை பார்த்தாலே பாவமாக இருக்கிறது எனவும் முன்பெல்லாம் வீதிகளில் உண்டியல் வைத்து கலெக்ஷன் செய்வார்கள் என்றும் ஆனால் இப்போது உண்டியல் வைத்தால் அது எங்கள் உண்டியல் என்று சேகர் பாபு தூக்கிக்கொண்டு ஓடி விடுவதாகவும் அவர் விமர்சித்தார். அன்றாட செலவுக்கு கூட அறிவாலயத்தில் கையேந்தும் நிலைமையில் கம்யூனிஸ்டுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்
விஜய் கூட்டத்தில் ஒரு குழந்தை இறந்து விட்டது. அதனுடைய தாயை அழைத்து ரிசார்ட்டில் வைத்து சாப்பாடு போட்டு பேமெண்ட் கொடுத்து அனுப்பி வைக்கிறார் எனவும், வெளியில் வந்து அந்த பெண் தன்னுடைய குழந்தை இறந்து விஜயை நேரில் பார்க்க வைத்தது என பேட்டி கொடுக்கிறார். தங்கள் வீட்டில் 9 பேர் இருப்பதாகவும் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் அவர்களை விஷம் வைத்து கொள்வதாகவும் மற்றொரு பெண் பேட்டி அளிக்கிறார்.
ஒரு சமுதாயம் வளர வேண்டும் என்றால் பெண்களும் இளைஞர்கள் தான் காரணம் இவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது எனவும் விஜயின் கூட்டத்திற்கு வரும் இளைஞர்களையும்,பெண்களைப் பார்த்தால் தமிழ்நாடு என்னவாகிவிடும் என்ற கவலை இருக்கிறது. மக்களை ஆள நினைப்பவர்கள் மக்களோடு இருக்க வேண்டும் ஆனால் விஜய், அவர் கூட நிற்கும் பவுன்சிலர்களுக்கும் மக்களுக்கும் தண்ணீர் கூட கிடையாது.
தனக்காக இறந்தவர்களை போய் பார்க்காத தலைவர் ஒரு தலைவர் விஜய். கரூர் சம்பவத்தில் மட்டும் அரசியலாக்காமல் எடப்பாடியார் பேசவில்லை என்றால் விஜயின் ஜனநாயகம் மட்டுமல்ல விஜயே வெளியே வந்திருக்க மாட்டார். விஜய் வெளியில் வராமல் வீடியோ காலில் அரசியல் செய்கிறார். வீட்டுக்கு ஒரு விஜய் வருவான் என கூறுகியவர் கடைசி வரையும் விஜய் வர மாட்டார். விஜய் வெளியில வருவதெல்லாம் இருக்கட்டும், முதலில் அவருடைய பொண்டாட்டி பிள்ளைகள் தங்களுக்கு ஓட்டு போடுவார்களாக என பாருங்கள்.
இதையும் படிங்க: "தீயசக்தி திமுக"... சிறுவர்களை வைத்து பிரச்சாரம்... தவெக நிர்வாகி மீது FIR..!!