"எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது எடப்பாடி பழனிச்சாமி எடுப்பது தான் இறுதி முடிவு அவரது பதில் சுப்ரீம் கோர்ட் பதிலாகும் திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று 30.06.25 திண்டுக்கல் அதிமுக கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த 2 நாட்கள் முன்பு மின் பகிர்மான அலுவலகத்தில் அரசு விழா நடைபெற்றது. அப்பொழுது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் குப்பையில் வீசப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது.
இச்சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் கண்டனத்தை பதிவு செய்தார் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறவில்லை. 2026 தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மை பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என தெளிவாக அமித் ஷா கூறியுள்ளதாக மாற்றி கூறிய நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவது எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற சூழ்நிலைதான் தற்பொழுது நிலவி வருகிறது.
இதையும் படிங்க: அசரவைத்த அமித் ஷா... தமிழ்நாட்டில் பிடித்த உணவு, பிடித்த இடம் இதுதானாம் ...!
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது என்ன திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, திருமாவளவன் ஒரு நல்ல மனிதர், அவரது நிலைப்பாடு நிரந்தரமானது அல்ல சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேசுகின்றார். கொள்ளையில் உறுதியானவர். ஒரு முடிவு எடுத்தால் அதில் ஸ்ட்ராங்காக நிற்பதில்லை என்றார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி கிடையாது என தெளிவாக நேற்று கூறிவிட்டார். கூட்டணிகளுக்கு எத்தனை தொகுதி என்பதை எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார்.
எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் சுப்ரீம் கோர்ட் முடிவு மற்றவர்கள் சொல்வது எல்லாம் தற்காலிகமானது எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் இறுதியானது. எடப்பாடி தலைமையில் தான் கூட்டணி அண்ணா திமுக என்றால் எடப்பாடி தான் எடப்பாடி என்றால் அண்ணா திமுக தான். அதிமுக கூட்டணியில் உள்ள ஜி கே வாசன் கூட்டணி ஆட்சி தான் என கூறியது குறித்த கேள்விக்கு, அது அவருடைய சொந்த கருத்து கருத்து கூற அவருக்கு உரிமை உள்ளது. அவரது கருத்தை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது எனக்கூறினார்.
இதையும் படிங்க: அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்த அமித் ஷா... பாஜக கூட்டணியில் புது ட்விஸ்ட்...!