×
 

காலை வாரத்துடிக்கும் காங்கிரஸ்... 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு...எச்சரித்த ராஜேந்திர பாலாஜி..!

திமுக கூட்டணியில் 50- கட்சிகளை இணைத்தாலும்234- தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையை தமிழக மக்கள் உருவாக்குவார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக  நடந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-  தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தேதி குறித்த அறிவிப்பு10- நாட்களில் வெளிவரும். அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி. தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் படும் பாட்டை கணக்கிட முடியாது. தமிழகமே கண்ணீர் விடுகிறது. அதிமுக 210- தொகுதிகளில் வெற்றி பெறும்.

திமுக- காங்கிரஸ் கட்சிகளின் ஜாதகத்தில்  ஏழரை சென்று கொண்டிருகிறது. திமுக போட்டியிடும் இடங்களில் காங்கிரஸ் காலைவாறும், காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் திமுக காலைவாறும். திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையே  ஏழாம் பொருத்தமாக உள்ளது. திமுக- காங்கிரஸ் இடையே இணக்கமான சூழ்நிலை இல்லை.

மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் தருவதாக மக்களை கேவலப்படுத்திய திமுகவிற்கு தோல்வி என்ற பரிசைத் தர  மக்கள் தயராகி விட்டனர். வரி விதித்து ஏழை மக்களை மீண்டும் ஏழையாக்கியதுதான் திமுக. சொன்ன வாக்குறுதியை நிறைவவேற்றியது அதிமுக. நிறைவேற்றாமல் ஏமாற்றியது திமுக. கடைசி நேரத்தில் தேர்தலுக்காக பிலிம் காட்டுகிறது திமுக.
 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரை வழிமறித்து கேள்வி எழுப்பியதால் மகளிர் உரிமைத் தொகையை  வழங்கினார்கள். சொன்னதையும், சொல்லாததையும் செய்தவர்  எடப்பாடி பழனிச்சாமி. கல்வியில் புரட்சியும், பொருளாதாரத்தில் எழுச்சியும்  ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதும், கட்டியதற்கு ரிப்பன் வெட்டியதும் தான்   திமுக ஆட்சியின் வேலை. சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியது அதிமுக. அதிமுக ஆட்சியில் ரயில்வே  மேம்பால ப் பணிகளைத் தொடங்கவேண்டிய நேரத்தில் வழக்குப் போட்டு வேலையை நடக்க விடாமல் தடுத்ததனர். 

இதையும் படிங்க: “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

காங்கிரசும், திமுகவும் விருதுநகர் மாவட்ட மற்றும் சிவகாசி தொகுதி மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி சட்டங்களாக இயற்றியது அதிமுக. திமுக ஆட்சியின் 5- ஆண்டு காலத்தில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என சொல்ல முடியுமா?. மக்களின் வரிப்பணம் அனைத்தும் தற்போது கருணாநிதி வீட்டின் சொத்தாகிவிட்டது. திமுக ஆட்சியில் காவேரி, வைகை போன்ற ஆறுகளை தூர்வாறுவதாக பணத்தை மண்ணில் புதைத்து, ஆற்றில் விட்டு கரைத்து விட்டார்கள். முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் தாமிரபரணி, காவேரி ஆறுகளிருந்து வாய்க்கால் அமைத்து பல மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்திருப்போம்.  விளம்பரத்தால் ஆட்சியை நிலைநிறுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக தலைமையிலான விளம்பர ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. அண்ணா உருவாக்கிய திமுகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிவிட்டார். தேர்தலில் பணத்தைக் கொடுத்து வெற்றி பெறலாம் என்ற திமுகவின் கணக்கு அடித்து நொறுக்கப்படும்.

திமுக தங்களது கூட்டணியில் 50- கட்சிகளை இணைத்தாலும்  234- தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையை தமிழக மக்கள் உருவாக்குவார்கள். பலமான அதிமுக கூட்டணியா எங்களை எதிர்க்கும் வல்லமை திமுக கூட்டணிக்கு கிடையாது.  

 

இதையும் படிங்க: ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்... மகப்பேறு விடுப்பு..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share