×
 

“ஆடத் தெரியாதவர் அரங்கு கோனல் என்றாராம்”... விஜயை தாறுமாறாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்...!

வச்சிட்டு என்ன வஞ்சகமா பண்றாரு, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில வரும் .ஆகவே வச்சுக்கிட்டு வஞ்சகம் செய்பவர் இல்லை. இல்லாத கொடுமை தான், தெரியாத கொடுமைதான்.

மாற்றம் தந்த மக்களுக்கு முன்னேற்றத்தை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏமாற்றத்தையாவது தராமல் தவெக அரசு  ஆட்சியை நடத்துமா? என முன்னாள் அமைச்சர் ஆர் .பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், ஆடத் தெரியாதவர்  அரங்கு கோனல் என்றாராம், அதேபோல மாற்றத்தை தருவோம்  என
தவெக கட்சி கூறியது ஆனால் முதல்வர் விஜய்யின் தலைமையிலான த.வெ‌க அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதோ? இல்லையோ? தெரியாது ஆனால் சட்டசபையில் நடவடிக்கையின் மூலம் புதிய மாற்றத்தை தொடங்கி வைத்திருக்கிறார்கள் .

நூற்றாண்டு காண்கின்ற சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற மக்கள் பிரச்சனைகளுக்கு ஆளும் தவெக அரசின் அமைச்சர்கள் அடிச்சுவிடும் அதிரடியான பதில்களை பார்த்து அசந்து போய் இருக்கிறது தமிழகம். இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய தலைப்பு செய்தியாக உள்ளது.

இதையும் படிங்க: அண்ணி த்ரிஷா துணை முதலமைச்சர் ஆவது எப்போது?... மீண்டும் விஜயை சீண்டும் ஆர்.பி.உதயகுமார்...!

சட்டசபையில் நெல் சேமிப்பு கிடங்கு பற்றி வரிக்கு வரி பேசுறாரே அவர் தான் விவசாயத்துறை அமைச்சரா? இல்லை அவர்தான் அறநிலையத்துறை  அமைச்சர் ரமேஷ், அதே போல கரும்பு சாகுபடி பற்றி பேசுகிறாரே அவர்தான் விவசாயத்துறை அமைச்சரா? இல்லை
அவர்தான் விளையாட்டு துறை  ஆதவ் அர்ஜுனா.நெல் மானியம் பற்றி பேசுகிறாரே அவர் தான் உணவுத்துறை அமைச்சரா இல்லை? அவர்தான் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன்.கடன் நிலைமையைப் பற்றி தெளிவாக சொல்கிறாரே அவர்தான் நிதியமைச்சரா? இல்லை அவர்தான் மருத்துவ மற்றும் நல்வாழ்வு துறை அருண்ராஜ் .


சட்டசபையில் 12,400 என்பதை,  12 ஆயிரத்தி 4000 என்று தட்டு தடுமாறி தமிழ் பேசுகிறாரே அவர் யார் அவர்தான் நிதி அமைச்சர் மரிய வில்சன் ,பேராசிரியர் அன்பழகன் தொடர்ந்து பல்வேறு ஜாம்பவான்கள் அமர்ந்திருந்த அந்த நிதி அமைச்சர் அதிகார அரியாசனத்தில் அமைந்திருக்கிற அமைச்சர் மரிய வில்சன், தமிழ்நாட்டின்  பட்ஜெட்டை இந்த மாதிரி  தாக்கல் செய்து இப்படி புள்ளி விபர கணக்கை வெளியிட்டு இருக்கிறார்.

 சரி இதெல்லாம் இருக்கட்டும் எல்லா சப்ஜெக்டுக்கும் ,டக்கு டக்குனு எழுந்து நின்று கம்பீரமா பேசுறாரே அவர்தான்  முதலமைச்சரா? இல்லை ,அவர்தான் பள்ளி கல்லூரி துறை அமைச்சர் ராஜ்மோகன்.

 அவருக்கு பக்கத்துல எந்த பதில் என்றாலும் அதிமுக இருக்காது, பாஜக இருக்காது, திமுக இருக்காது, இங்க சட்டசபையில் யாரும் இருக்க மாட்டீங்க நாங்க மட்டும்தான் இருப்பேன்னு கடிச்சு சொல்றாரே அவர் யார் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரா?  இல்லை அவர்தான் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்.

 தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சந்தேகம் வருவது என்றால் எந்த கேள்விக்கும் பதிலே சொல்லாமல் கோர்ட் போட்டு,அமைதியா சிரிச்சுக்கிட்டே உட்கார்ந்து இருக்கிறாரே,  அவர் யாரு? அவர் தான் நம்ம தமிழ்நாட்டின் புதுசா கிடைச்சிருக்கிற சிஎம் விஜய் சார்.
என்ன செய்வது தமிழ்நாட்டில் சாபக்கேடு, ஸ்கிரிப்ட் இல்லாமல் பேசுங்கள் சார் என்று சொன்னால் எப்படி பேசுவார், ஸ்கிரிப்ட் வச்சு வசனம் பேசி நடித்து சட்டசபைக்கு முதலமைச்சராக வந்து விட்டார்‌.

அவருக்கு இந்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஜீவாதார உரிமைகள், தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு இதை எழுதி கொடுத்தால் தான் பேச முடியும். ஸ்கிரிப்ட்டை வைத்து வசனம் பேசி மற்றவர்கள் பேசினால் ஸ்பீச், விஜய் பேசினால்  ரிச்ன்னு ரீல்ஸ் போட முடியும் .

இப்போது சப்ஜெக்ட் பேச சொன்னால்? அவரே ஒரு சப்ஜெக்ட்டா சட்டமன்றத்தில் அமைந்திருக்கிற காட்சியை பார்த்து ,நமக்கு கிடைத்திருக்கிற முதல்வர் என்று பெருமை பேசுகிற நிலையில், சப்ஜெக்ட் பேச சொன்னா அது என்ன நியாயம்? தெரிஞ்சா டக்கு டக்குனு சொல்ல மாட்டாரா நம்ம முதல்வர் விஜய் ?வச்சிட்டு என்ன வஞ்சகமா பண்றாரு, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில வரும் .ஆகவே வச்சுக்கிட்டு வஞ்சகம் செய்பவர் இல்லை. இல்லாத கொடுமை தான், தெரியாத கொடுமைதான்.

 ஆனால் ஒன்று இதை சொன்னால் மக்கள் ஏற்றுப்பார்களா நிச்சயமாக இல்லை, பேச்சு முக்கியம் இல்லை சார் செயல் தான் முக்கியம் புரிஞ்சவங்க புரிஞ்சுக்கங்க ,புரியாதவங்க இதுதான் தவெக அரசின் மாற்றம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 காலம் தன் பதில் சொல்லும் ,  முதல்வர் விஜய்க்கு இந்த முதலமைச்சர் அரியாசனத்தில் அமர்வதற்கு அவருக்கே குற்ற உணர்வு இருக்கின்ற காரணத்தால் கூனி குறுகி உட்காருவதை நம்மால் பார்க்க முடிகிறது .

 மாற்றம் தந்த மக்களுக்கு முன்னேற்றத்தை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏமாற்றத்தையாவது தராமல் தவெக அரசு புதிய ஆட்சியை நடத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம் .

தினமும் ஒரு தீர்மானம், தினமும் ஒரு நாடகம் , சட்டமன்றத்தில் அரங்கேறி வருகிறது.தமிழக மக்களுக்கு ஒன்றும் கிடைக்கல பட்ஜெட்டில்? ஏதாவது கிடைத்தால் அது அம்மா ஆட்சியின் திட்டங்கள், ஏதாவது வந்தால் எடப்பாடியார் ஆட்சியின் திட்டங்கள்  இதுக்கு எதற்கு விஜய்,  எடப்பாடியாரே முதலமைச்சராக இருக்கலாமே என தமிழக மக்கள் நினைப்பது நமக்கு பால் வார்ப்பதாக உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம். என கூறினார்

இதையும் படிங்க: விரைவில் கைதாகிறாரா ஆர்.பி.உதயகுமார்?... CM விஜய் குறித்த சர்ச்சை பேச்சு புகார்... முழுவீச்சில் காவல்துறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share