நீ செய்த தியாகம் என்ன?... சாதி சொல்லி ஓட்டு கேட்ட தவெக வேட்பாளருக்கு கே.பி.முனுசாமி அட்வைஸ்...!
சாதி பற்றி பேசுவதை தவிர்த்து, உண்மை, நேர்மையாக மக்களிடம் பேசினால் தான் அரசியலில் நிலைத்திருக்க முடியும் என தவெக வேட்பாளருக்கு கே.பி.முனுசாமி அறிவுரை.
வேப்பனஹள்ளி தவெக வேட்பாளர் ஜாதியை முன்வைத்து வாக்கு சேகரிக்கிறார் - சாதி பற்றி பேசுவதை தவிர்த்து, உண்மை, நேர்மையாக மக்களிடம் பேசினால் தான் அரசியலில் நிலைத்திருக்க முடியும் என தவெக வேட்பாளருக்கு கே.பி.முனுசாமி அறிவுரை.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தேர்தல் அதிமுக - திமுக - தவெக என மும்முனை போட்டியாக நிலவி வருகிறது. இந்நிலையில்,
அதிமுக துணை பொதுச்செயலாளரும், அக்கட்சியின் வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளருமான கே.பி.முனுசாமி, சூளகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, சூளகிரி ஒன்றியம் புக்கசாகரம் எனும் கிராமத்தில் பேசிய அவர்.. திடீரென ஒரு கட்சி உருவாகி அந்தக் கட்சியிலிருந்து வந்து, தனது சொந்தங்களிடம் (நான் உங்கள் மணவாடு) எனக்கு உதவி செய்யுங்கள் என கேட்பது என்ன பழக்கம் என தவெக வேட்பாளர் சம்பங்கி பெயர் குறிப்பிடாமல் பேசினார்.
இதையும் படிங்க: பள்ளியில் ஆசிரியைக்கு நடந்த கொடூர சம்பவம்... அதிர்ச்சியில் சேலம் மக்கள் ...நாண்ட்
ஏற்கனவே அவர் தன்னுடன் இருந்தவர்தான் என குறிப்பிட்டு பேசிய முனுசாமி, ஒற்றுமையாக இருக்கும் சமூகத்தை ஏன் பிரிக்கிறீர்கள்., நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மக்களைப் பிரிக்க கூடாது., உங்களுக்கென ஒரு கட்சி இருக்கு, அந்த கட்சிக்கு சின்னம் இருகிறது, அதற்கு வாக்களியுங்கள், வாக்களிக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது., மீண்டும் அடுத்த ஐந்து வருடத்தில் மக்களிடம் தான் வந்து நிற்க வேண்டும் என்றார்.
தான் 50 வருடங்களாக அரசியல் இருந்ததாக குறிப்பிட்ட முனுசாமி, அவ்வளவு அனுபவம் இருந்தும் வெறும் 3 வருடங்கள் மட்டுமே மந்திரியாக இருந்தேன். ஆனால் நான் கட்சியை விடவில்லை. கட்சிக்குள் ஜாதி, மதம் எதுவும் வரக்கூடாது என்றார்.
கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கான உழைப்பு எவ்வளவு இருக்கிறது, அதற்காக நீ செய்த தியாகம் என்ன? இந்த சமூகத்துக்கு நீ செய்த பணி என்ன? இந்த சமுதாயத்திற்கு நீங்கள் ஓடிய ஓட்டம் எத்தனை மயில், எத்தனை வருடம், எத்தனை நாள் என்பதை பார்க்க வேண்டும்., அதைத் தவிர்த்து வந்தவுடன் ஜாதிக்காரர்களிடம் வாக்கு கேட்பது சரியானது அல்ல என அறிவுரை வழங்கினார். தமிழ்நாட்டில் மொத்தம் 148 ஜாதிகள் உள்ளன. ஒரு ஜாதியிடம் நீ வாக்கு கேட்டால் அப்போ மற்றவறெல்லாம் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்.
ஜெயித்து வெற்றி பெரு சந்தோஷம், ஆனால் நேர்மையாக பேச வேண்டும், உண்மையாக பேச வேண்டும், அப்போதுதான் அரசியலில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். இல்லையென்றால் பாதியிலேயே சென்று விட வேண்டும் என்றார். ஆகவே இது போன்ற ஆட்களை எல்லாம் பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: ஹார்முஸை திறக்க 40 நாடுகள் கூட்டணி! பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிரடி அறிவிப்பு!