அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!
நாங்குநேரி தொகுதியில் சீட் கொடுக்கவில்லை என்பதால் அதிருப்தியில் அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் விலகல்
நாங்குநேரி தொகுதியில் சீட் கொடுக்கவில்லை என்பதால் அதிருப்தியில் அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் விலகல்: வலியோடு அதிமுகவிலிருந்து வெளியேறுகிறேன்: 2021ல் அதிமுக தோல்வியடைவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்காகவே உழைக்கச் சொன்னால் எப்படி: உழைப்பாளிகளுக்கு அதிமுகவில் பலன் இல்லை
நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: நான் 1986 லிருந்து அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையை ஏற்று மாணவனாக இருந்த காலத்தில் இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டு வந்தேன்.
2019-ல் கழகங்கள் எவ்வளவோ பிளவு பட்டபோதும் டிடிவி மற்றும் சசிகலா தலைமையில் ஒவ்வொரு அணியாக திரண்ட பொழுதிலும் போன பின்பு கூட நான் இபிஎஸ் தலைமையை ஏற்று கூக்கிரல் இட்டவர்கள் நாங்கள். நாங்குநேரியில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்த போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் எனக்காக சேர்ந்து வேலை செய்தார்கள் அதன் மூலமாக நான் எம்எல்ஏவாக ஆகினேன்.
இதையும் படிங்க: ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!
33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு எனக்கு நாங்குநேரி மக்கள் தந்தார்கள். அன்பு கொடிமக்கள் 42 ஆயிரம் வாக்காளர்கள் அந்த பகுதியில் இருக்கிறார்கள். அந்த காலகட்டம் மிகவும் கொடுமையான கொரோனா காலம். வீடு வீடாக சென்று மக்களுக்கு நான் பணி செய்து இருக்கிறேன். 2021ல் மீண்டும் ஒரு வாய்ப்பு தருவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். இந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது.
அந்தத் தொகுதி ஒரு சென்சிடிவ் ஆன தொகுதி. தொகுதிகள் யார் போட்டியிட வேண்டும் யார் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்பதை எம்ஜிஆரை கொண்டு வந்தார். 2019-ல் 18 மாதங்கள் நான் வெற்றி பெற்று மக்கள் பணி செய்தேன். அதன் பிறகு போட்டியிட்டவர் தோல்வியுற்றார்.
இந்த வாய்ப்பு எனக்கு இந்த முறை கிடைக்கும் என்று மக்களோடு மக்களாக பணியாற்றிக் கொண்டிருந்தேன் ஆனால் கிடைக்கவில்லை. ஏன் என்று கூட கேட்காமல் 2021ல் யாரால் தோற்றமோ அவருடைய கட்சிக்கு நாங்கள் பணியாற்றக்கூடிய வாய்ப்பை பொதுச் செயலாளர் எடப்பாடி வழங்கி இருக்கிறார். தொகுதி மக்களின் நிலை என்ன.
தொகுதியை ஈசியாக இன்னொருவருக்கு தாரை வார்த்து கொடுத்து இருக்கக்கூடிய நிலை மாதிரி இருக்கிறது. தொகுதியில் நடைபெற்ற கலவரங்கள் ஜாதி மத மோதல்கள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். அதிமுக போட்டியிட்டால் வெற்றி பெறும்.
நாங்குநேரி தொகுதியை தொடர்ந்து தாரை வார்ப்பதற்கு என்ன காரணம். அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் முடிவு செய்யும். வேட்பு மனுதாக்கல் செய்யும் வரை காலம் இருக்கிறது. நான் கூட்டணிக்கு கொடுத்ததை வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு பொறுப்பை ஒப்படைக்கும் முன்பு அது நன்மைகள் முடியுமா? தீமையில் முடியுமா என்பதை பார்த்து செய்ய வேண்டும்.
வென்று விடுவார்கள் என்று நினைப்பவர்கள் தோற்றுவிடுவார்கள்.தோற்றுவிடுபவர்கள் என்று எண்ணுபவர்கள் வென்று விடுவார்கள் அதுதான் அரசியல். களம் நமக்கான களம். அதிமுகவிற்கான களம் இது 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பவர்களுக்கு பதவியில்லை. உண்மையானவர்களுக்கும் பதவியில்லை. பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் பதவி என்றால் நாங்கள் எங்கே செல்வது.
அதிமுகவில் உழைப்பவர்களை கண்டு கொள்வதில்லை. ஒரிஜினல் அம்மாவின் பிள்ளைகள் நாங்கள். 2001 இல் இருந்து 25 வரை பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வெற்றி பெற்று வருகிறது. இந்த தொகுதியை திமுகவிடமிருந்து கூட்டணி கட்சியினர் யாராவது கேட்டால் முதல்வர் ஸ்டாலின் கொடுப்பாரா.
அதே போல் 7 முறை நாங்குநேரி தொகுதியில் அதிமுக வென்றிருக்கிறது. அதிருத்தியின் நிலைப்பாடுகள் அல்ல இதை நான் தெளிந்து முடிவெடுக்கக்கூடிய நிகழ்ச்சி. இயக்கத்தை விட்டு வெளியேறுகிறேன். அதுவும் கடந்த மனதோடு வெளியேறுகிறேன். இன்னும் ஐந்து ஆண்டுகள் அதற்குரிய எனக்கு எம் எல் ஏ சீட் தரவில்லை என்பது வருத்தமில்லை. காலம் வயோதிகம் பொருளாதாரம் இதையெல்லாம் தாக்கி பிடிப்பதற்கு தகுதி வேண்டும்.
ஒரு கட்சிப் பதவியோ அங்கீகரமான பதவியோ நம்பி தான் இத்தனை காலமாக பயணித்துக் கொண்டிருந்தோம் இதுவரை அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடிந்த இதயத்தோடு நட்புகளையும் இழந்து தொண்டர்களையும் இழந்து இயக்கத்தை விட்டு வெளியேறுகிறேன். மன வலியாக இருக்கிறது. அதுதான் என்னுடைய நிலை.
நான் மாற்றுக் கட்சிக்கு செல்கிறேனா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தொண்டர்கள் whatsapp-ல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அது உண்மையா இல்லையா என்பதை நான் போன் போட்டு கேட்க முடியாது. நாளை முக்கிய தலைவரை நீங்கள் சந்திப்பது உண்மையா? என்ற கேள்விக்கு, அது தவறான தகவல் நான் என் மனைவியை, பிள்ளைகளை சந்திப்பதற்காக சென்னை செல்கிறேன். சற்று மன ஆறுதலுக்காக செல்கிறேன்.
நான் முடிவெடுக்கும் பொழுது அனைவரிடமும் தெரிவித்து விட்டு தான் எடுப்பேன். இது தொடர்பாக நான் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொள்ளவில்லை. சீட் வழங்காத போது நான் அவர்களை தொடர்பு கொள்ளும் மனநிலையில் இல்லை. அந்த நிலையிலும் அவர் இல்லை அவர் டூரில் இருக்கிறார். நான் அவரை குறை சொல்ல மாட்டேன் என்றார்.
இயக்கத்தை விட்டு வெளியேறுகிறேன் என்பது தாங்க முடியாத வலி. அதற்கு மருந்து யாராலும் கொடுக்க முடியாது. நான் பரிசுத்தமானவன் என்பது எங்கள் பொதுச் செயலாளருக்கு தெரிந்திருக்க வேண்டும். எனக்கான பாதையை தேடி செல்கிறேன். வியாபாரமாகவும் இருக்கலாம் புதிய அரசியல் பாதையாகவும் இருக்கலாம்.மீண்டும் நாங்குநேரியில் மாற்றுக் கட்சியில் இணைந்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, மக்களிடம் கருத்தைக் கேட்டு அதன் பிறகு அதைப் குறித்து முடிவு செய்வேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!