ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் முன்னிலையில் புறக்கணிக்கப்பட்டார் அதிமுக கட்சியின் தூணான எஸ் பி வேலுமணி
விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் துரோகி என தொண்டர்களால் அடையாளப்படுத்தப்பட்டார் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி. அதிமுக கட்சியின் இரட்டையர்களில் ஒருவரை புறக்கணித்தார் எடப்பாடி பழனிசாமி.
பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு பொள்ளாச்சி ஜெயராமன் தாயாரின் மறைவிற்கு ஆறுதல் தெரிவிக்க வந்திருந்தார்.
அவருக்கு முன்னதாக எஸ் பி வேலுமணி பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு வந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.விஜய் கட்சிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க அவர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இது அதிமுக கட்சியின் நிலைப்பாட்டில் மாறுதலை ஏற்படுத்தி கட்சி இரு பிளவாகும் நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!
இது அதிமுக கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுமார் ஆயிரம் தொண்டர்கள் குழுமியிருந்த இடத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போது தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் தூணான எஸ் பி வேலுமணி பொதுவெளியில் தொண்டர்களால் துரோகி என அடையாளப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எஸ் பி வேலுமணி பொது இடத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்வு இடத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் ஒரு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்பி வேலுமணி இரட்டையர்களாக இருந்து வந்த நிலையில் தற்போது அஞ்சலி செலுத்தும் இடத்தில் எஸ் பி வேலுமணி புறக்கணிக்கப்பட்டார்.
ஒரே அறையில் எஸ் பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் கூட பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி முதன்மைப்படுத்தப்பட்டு எஸ் பி வேலுமணி ஓரம் கட்டப்பட்டார். துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுக்கு பின்னால் தொண்டர்களோடு தொண்டர்களாக எஸ் பி வேலுமணி புறக்கணிக்கப்பட்டு இருந்தது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
ஏற்கனவே கட்சியினரிடையே சலசலப்பு நிலவி வந்த நிலையில், வெளியே தொண்டர்கள் கூச்சலிட்டதை செய்தி ஒளிப்பதிவு செய்ய முயன்ற செய்தியாளர்களின் கேமராக்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, உடைக்க முயற்சிக்கப்பட்டது.ஏற்கனவே அதிமுக கட்சி இரண்டாக உடைக்கப்படும் என தொண்டர்களிடையே கருத்து நிலவி வரும் நிலையில் பொதுவெளியில் கட்சியின் இரட்டை தூண்கள் என அறியப்படும் இரட்டையர்களில் ஒருவர் புறக்கணிக்கப்பட்டு நடைபெற்ற சம்பவங்களால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
இதையும் படிங்க: "எங்களுக்குள் பிளவு இல்லை"..! அதிமுகவில் ஒற்றுமை தான்... S.P. வேலுமணி உறுதி..!