தேர்தல் வந்தால் பெட்டியைத் தூக்கிட்டு கட்சி, கட்சியா போய்டுவாங்க... டேரக்ட்டா பிரேமலதாவை சீண்டிய விந்தியா...!
தேர்தல் வந்துவிட்டால் பிரேமலதா கட்சி கட்சியாக சென்று பேசுவார். துண்டு போட்டு அரசியல் நடத்தும் ஒரே தலைவி பிரேமலதா மட்டும் தான்.
தமிழ்நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற
அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: பஞ்சு மூட்டை தூக்குபவர்கள் கூட பத்து மூட்டைக்கு மேல் தூக்க மாட்டார்கள் , ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் 10, 15 க்கும் மேற்பட்ட கூட்டணிகளை சுமந்து கொண்டுள்ளார் . ஏற்கனவே உள்ள அமைச்சர்களால் ஸ்டாலினுக்கு தூக்கம் கெட்டுப் போய்விட்டது. கடந்த தேர்தலில் ஸ்டாலின் என்னென்ன சொன்னார். பெட்ரோல் விலையைக் குறைப்பேன் என்றார். பருப்பு விலை குறைப்பேன், பால் விலை குறைப்பேன் என்றார் ஏதும் குறைத்தாரா? இல்லையே விவசாய கடன் தள்ளுபடி, பயிர் கடன் தள்ளுபடி செய்வேன் என்றாரே செய்தாரா?. இந்த முறை எங்களை நம்பி ஓட்டு போடுங்கள். இரட்டை இலை நம்பி ஓட்டு போடுங்கள். ஜெயலலிதாவை நம்பி ஓட்டு போடுங்கள். எடப்பாடியாரை நம்பி ஓட்டு போடுங்கள். ஓட்டு போட்டீர்கள் என்றால் நீங்கள் நிம்மதியாக வாழலாம். எத்தனை பொய்யான வாக்குறுதிகள் எத்தனை பொய்யான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஐந்து வருடத்தில் எத்தனை ஊழல் செய்திருக்கிறார்கள். சரக்கு அடிக்கும் இடத்தில் ஊழல் , சாமி கும்பிடும் இடத்தில் ஊழல்,இவர்களது ஊழலை பார்த்து மக்களை அதிமுகவிற்கு ஓட்டு அளிக்க தயாராகி விட்டார்கள்.
தேர்தல் வந்துவிட்டால் பிரேமலதா கட்சி கட்சியாக சென்று பேசுவார். துண்டு போட்டு அரசியல் நடத்தும் ஒரே தலைவி பிரேமலதா மட்டும் தான். அரை பர்சன்ட் ஓட்டு வங்கி கூட இல்லாத கட்சியை , அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். அவங்களுக்கு பெரிய கொள்கை எல்லாம் கிடையாது. இவற்றையெல்லாம் பார்க்காமல் கேப்டன் சீக்கிரமாக சென்றுவிட்டார்.நல்லவர்கள் எல்லாம் சீக்கிரமாக சென்று விடுவார்கள். தமிழகத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது .நான் வேண்டுமென்று மிகைப்படுத்தி கூறவில்லை. தமிழ்நாடு போராட்ட களமாக மாறி வருகிறது. தமிழ்நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வரவேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும்.
இதையும் படிங்க: கூட்டணி கட்சியினரை சந்திக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு தடை! கடிவாளம் போட்ட பிரேமலதா! திமுக ஷாக்!!
ஐந்து வருட விடியா திமுக ஆட்சியில் எத்தனையோ சோகங்களை பார்த்திருக்கிறோம், கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்தார்கள்.
பெண்களுக்கும் பெண்களுக்கும் எதிராக குற்றங்கள் அதிகம் நடக்கிறது. கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் நான்தான் முதலமைச்சர் என்கிறார்கள். கர்நாடகாவில் அணை கட்டுகிறார்கள், கேரளாவில் அணை கட்டுகிறார்கள். ஆனால் திமுகவினர் கண்ணைக் கட்டி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இப்போது ஜெயலலிதா இருந்திருக்க வேண்டுமென பொதுமக்கள் நினைக்கிறார்கள். அம்மா மாதிரி எடப்பாடியார் இருந்து சிறப்பான ஆட்சியை செய்தார். ஓபிஎஸ் டிராமா முடிவடைந்து விட்டது. மக்களின் ஒருவராக எடப்பாடி யார் இருக்கிறார். அவர் பின்னால் நாம் இருக்க வேண்டும். நான்கு வருடம் நல்லாட்சி தந்த அனுபவத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்து எடப்பாடியார் நல்லாட்சி தருவார்.
இந்த அடிமை ஆட்சியில் இருந்து உங்களை காப்பாற்றப் போவது யார்? பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தமிழகத்தை தலை நிமிர நிற்க செய்வேன் என வாக்குறுதி தரப் போவது யார்? தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வாக்குறுதி தரப் போவது யார்? இப்படி யார் யார் என கேள்விக்கு ஒரே பதில் எடப்பாடியார் தான். இந்தத் தேர்தலில் நன்றாக யோசித்து ஓட்டு போடுங்கள். மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த எடப்பாடியாருக்கா? தமிழகத்தை இருட்டாக்கிய ஸ்டாலினுக்கா ? என எண்ணி பாருங்கள். அரசு பள்ளி மாணவர்களை டாக்டராக்கி அழகு பார்த்த எடப்பாடியாரை எண்ணிப் பாருங்கள். பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய எடப்பாடி யார் எண்ணி பாருங்கள். துரோகிகளை கூடவே வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்சி நடத்திய எடப்பாடியார் எண்ணி பாருங்கள் எனக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: தேமுதிகவை இழுத்து வந்தது யார்? திமுகவில் கோஷ்டி பூசல்?! கனிமொழி Vs சபரீசன் தரப்பு வாக்குவாதம்!