அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து ஓட்டை.... இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி... தவெகவுக்கு அடித்த ஜாக்பாட்...!
அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகாவில் நிலவிவரும் உட்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் சி.வி. சண்மம் தலைமையிலான ஒரு அணி பக்கமும் என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தனித்தனியே தங்களுக்கான கொறடாவை நியமிக்க வேண்டும் என்று கூட சட்டப்பேரவையில் விண்ணப்பித்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பெருமான்மை இல்லாத காரணத்தினால் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுக்கக்கூடிய அந்த முடிவை வேலுமணி மற்றும் சிவி சண்முகம் என இருவரும் கைவிடுவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
நேரடியாக தமிழக வெற்றி கழகத்துக்கு பெருமான்மை இல்லாத சூழலில் சட்டப்பேரவையில் நடந்த வாக்களிப்பின் போது அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சி.வி.சண்முகம் அணியினர் வாக்களித்திருந்தனர்.அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதால் தவெகவிற்கு ஆதரவு அளித்ததாக எடப்பாடி பழனிசாமியே குற்றச்சாட்டிய நிலையில், அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடமில்லை என்பதை தவெக திட்டவட்டமாக அறிவித்தது. மேலும் ஒரு கட்சியில் இருந்து கொண்டே இன்னொரு கட்சிக்கு ஆதரவு அளித்ததால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி பறிக்கப்படலாம் என்பதாலும், அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி அணி மீண்டும் இபிஎஸ் உடன் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நேற்று அதிமுகவைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஜெயக்குமார் மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்த கையோடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறைக்குச் சென்று தவெகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!
இதனிடையே இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதே போல், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக நின்ற 25 எம்.எல்.ஏக்களின் 5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவருடன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியுமா?... முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட சரத்குமார்...!