Breaking! அதிமுகவில் சமாதானம்! இணைந்தது இரு அணிகள்?! இபிஎஸ் வீட்டிற்கு எஸ்.பி வேலுமணி தரப்பு வருகை!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தொடர் தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி தூக்கிய நிலையில், கட்சி இரண்டு அணிகளாக உடைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் நடைபெற்ற முக்கிய ஓட்டெடுப்பில், விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் அணி வாக்களித்தது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி அணி எதிராக வாக்களித்தது. இதன் பின்னர் அதிமுகவில் வெளிப்படையான பிளவு ஏற்பட்டது. சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.க்களும், எடப்பாடி பழனிசாமி அணியில் 22 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர்.
விஜய் அமைச்சரவையில் முக்கிய இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்புக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமைச்சரவை விரிவாக்கத்தில் அவர்களது அணிக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. இதையடுத்து அந்த அணிக்குள் அதிருப்தி வெடிக்க தொடங்கியது.
இதையும் படிங்க: விரைவில் அதிமுக அணிகளை இணைக்க தூது! சமாதான பேச்சில் தீவிரம் காட்டும் இபிஎஸ்!
அடுத்தடுத்து ஆறு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பினர். மேலும் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆக குறைந்தது. மறுபுறம், இபிஎஸ் அணியின் பலம் 28 ஆக உயர்ந்தது.
இந்த சூழ்நிலையில், சமாதான பேச்சு நடத்த எஸ்.பி.வேலுமணி முன்வந்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அதில் மீண்டும் இணைவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்றது. ஆனால் அந்த அணியில் சி.வி.சண்முகம் இடம்பெறாதது புதிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இங்கிருந்து அனைவரும் ஒன்றாக சபாநாயகரை சந்தித்து, சட்டப்பேரவை குழுத் தலைவர் மற்றும் கொறடா தேர்வு தொடர்பான கடிதத்தை வழங்கலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!