தரையில் மோதிக்கொண்ட விமானங்கள்! பயத்தில் உறைந்த பயணிகள்! மும்பை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்களின் இறக்கை நுனிகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஏர் இந்தியா விமானம் AI 2732 மும்பையில் இருந்து கோவைக்கு புறப்பட தயார் நிலையில் ஓடுதளத்தில் இருந்தது. அதே நேரத்தில் இண்டிகோ விமானம் 6E 791 ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்திறங்கிய பிறகு, பயணிகளை இறக்க பயணிகள் முனையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த இயக்கத்தில் இரண்டு விமானங்களின் வலது இறக்கை நுனிகள் உரசிக்கொண்டன.
இதனால் இரண்டு விமானங்களின் இறக்கைகளிலும் லேசான சேதம் ஏற்பட்டது. இரண்டு விமானங்களிலும் பயணிகள் இருந்தனர். ஆனால் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் மாற்று விமான ஏற்பாடுகள் செய்து பயணிகளை அனுப்பி வைத்தன.
இதையும் படிங்க: பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!
இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மும்பை DGCA அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். விமானிகள், தரை ஊழியர்கள் அல்லது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் (ATC) தவறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆழமான விசாரணை நடக்கிறது.
Mumbai Airport | While Air India AI2732 was taxiing from C1 towards M4 for departure, and the IndiGo arrival flight was taxing joining B1, the right wing tips of both the aircraft touched each other. Both aircraft were taxiing at the time of the incident. Both aircraft returned… pic.twitter.com/hZXxlrrx9l
— ANI (@ANI) February 3, 2026
பாதுகாப்பு சோதனைகள் முடியும் வரை இரண்டு விமானங்களும் தற்காலிகமாக பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ஆய்வுக்கு அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மும்பை விமான நிலையத்தில் தரை இயக்கங்களில் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
ஏர் இந்தியா தரப்பில், “AI 2732 விமானம் புறப்பட தயாராக இருந்தபோது மற்றொரு விமானத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்” என்று தெரிவித்தது. இண்டிகோவும் “எங்கள் விமானத்தின் இறக்கை நுனி மற்றொரு விமானத்துடன் தொடர்பு கொண்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பு” என்று அறிக்கை வெளியிட்டது.
இது போன்ற சம்பவங்கள் விமான நிலையங்களில் அரிதானவை அல்ல என்றாலும், பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். DGCA விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு! காங்., - கம்யூ மாறி மாறி புகார்! கேரள அரசியலில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!