பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!
பாமகவை பலவீனப்படுத்த திமுக சூழ்ச்சி மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி ஒரு கொடுங்கோள் ஆட்சி, அந்த ஆட்சி முழுமையாக அகற்றப்பட வேண்டும். திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என தெரிவித்தார். முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை.
அதையெல்லாம் மூடி மறைப்பதற்காக,திமுகவில் நடைபெறும் குற்றங்களை திசை திருப்புவதற்காக, நம்மைப் போன்ற கட்சிகளில் குழப்பம் செய்து, நம்மைப் போன்ற கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக, முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சி நிச்சயமாக பலன் அளிக்காது. நான் அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல அதுதான் என்னுடைய பலம். வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்தது திமுக. ஒரு வன்னியர் கூட வாக்களிக்கக் கூடாது என மகாபலிபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் பேசினேன். இந்த சமுதாயத்திற்கு திமுக செய்த மிகப்பெரிய துரோகம். நான்காண்டு காலம் ரொம்ப வைத்து கழுத்து அறுத்தது திமுக.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!
இந்த சமுதாயத்தையும், இந்த கட்சியையும், அய்யாவையும் நம்ப வைத்து திமுக கழுத்து அறுத்து விட்டது. இட ஒதுக்கீடு தடுக்கிறேன் இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தருகிறேன் என நம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டது. வன்னியர் சமுதாயத்தின் மக்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என பயம் வந்துவிட்டது. அந்த பயம் வந்ததால்தான் நம்முடைய கட்சி பலவீனப்படுத்த சூழ்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான் வில்லன். இந்த பிரச்சனைக்கு நானும் அய்யாவோ காரணம் கிடையாது.
ஒரு சிலர் நம் கட்சியிலேயே அந்த சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். யார் யார் என்பது விரைவில் தெரியவரும். திமுகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது அதை உடைத்து எறிவோம். என்னுடைய கட்சிக்கும் என்னுடைய சமுதாயத்தில், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில், கடைசி நாளாக இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஒரு பெண் சாலையில், நடந்த செல்ல முடியுமா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லதா ஆட்சி நடைபெற்று வருகிறது. புதிய பசுமை விமான நிலையம் பரந்தூரில் தான் அமைக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!