×
 

உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தாமதம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் காட்டமாக பேசிய அன்புமணி, உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை மற்ற கட்சியினர் தொகுதி பங்கிட்டை முடித்து விட்டார்களா என காட்டம்

திருச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி என் டி ஏ. அதிமுக தான் அதற்குத் தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். என்டிஏவுக்கு நோ சொல்கிறார்களா என்று இன்னும் இரண்டு மாதத்தில் தெரியும். 

மக்கள் திமுகவுக்கு ஐந்தாண்டு காலம் வாய்ப்பு கொடுத்தார்கள் அதில் தோல்வி அடைந்துவிட்டது திமுக. எங்கு சென்றாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரண்டு மடங்கு மூன்று மடங்கல்ல 10 மடங்கு அதிகமாகியுள்ளது.  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் அன்றாடம் நடைபெறுகிறது. 

முதலமைச்சர் விளம்பரப் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. சமூக நீதி என்றால் என்னவென்று தெரியவில்லை. அவ்வளவு மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. தற்போது விளம்பரம் மட்டுமே படுத்தி வருகின்றனர் வேறு எதுவும் நடக்கவில்லை. 

இதையும் படிங்க: மீண்டும் M.P. பதவி..! அன்புமணி, தம்பிதுரையின் வேட்பு மனுக்கள் ஏற்பு.. அதிமுகவினர் செம குஷி..!!

தமிழ்நாடு மக்கள் முடிவு செய்து விட்டார்கள் தெளிவாக இருக்கிறார்கள் திமுகவுக்கு வாய்ப்பு  கொடுத்தோம் தோல்வி அடைந்து விட்டார்கள். சாராயம் கஞ்சா விற்று வருகின்றனர் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

அரசு ஊழியர்கள்  அனைவரும் வீதியில் போராடி வருகின்றனர். அதனால் திமுகவை மாற்றி தேசிய  ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பளிப்போம் என்று முடிவு செய்துவிட்டனர். இன்னும் இரண்டு மாதத்தில் பார்க்கத்தான் போகிறீர்கள். 

களத்தில் திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் பெண்கள் தாய்மார்கள் பெற்றோர்கள் கோபத்தில் உள்ளனர்.  சசிகலாவை ராமதாஸ் சந்தித்ததை பற்றி தனக்கு தெரியவில்லை. பீகார் நிலைமை தமிழ்நாட்டுக்கும் ஏற்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் செல்வது வேடிக்கையாக உள்ளது. 

பீகார் வேறு தமிழ்நாடு வேறு. உருப்படியாக எதையாச்சும்  சொல்கிறாரா முதலமைச்சர். கோவையில் பல்லி விழுந்த உணவை உண்டு 41 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகத்தில் ஒரு குழந்தையை இரண்டு மனித மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். இன்னும் அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. இதில் முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை விளம்பரப்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறார் தமிழ்நாடு  மிளிர்கிறது ஒளிர்கிறது என்று.

ஒன்றுமில்லாத வெற்று விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். சட்டம் ஒழுங்கையும் பார்க்க வேண்டும். கஞ்சாவை தடுக்க வேண்டும் கொலையை தடுக்க வேண்டும் பாலிய வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும். 

தேசிய  ஜனநாயக கூட்டணியில்  தமிழக வெற்றிக் கழகம் வருகிறதா என்று தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வலுவாக இருக்கிறது. யார் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்று உங்களிடம் சொல்வதற்கு அவசியமில்லை. 

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி என் டி ஏ. அதிமுக தான் அதற்குத் தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். 

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் அதிமுக ஆட்சிதான் தமிழ்நாட்டின் நடக்கும்.  உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை தொகுதி பங்கீடு அறிவிப்பார்கள் அதுக்குள்ள என்ன பிரச்சனை.  திமுக தொகுதி பங்கினை முடித்து விட்டார்களா திமுக அறிவித்துவிட்டார்களா. என்று செய்தியாளர்களிடம்  காட்டமாக பேசிவிட்டு சென்றார். 

இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல்..!! அதிமுக சார்பில் அன்புமணி, தம்பிதுரை வேட்பு மனு தாக்கல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share