×
 

உச்சக்கட்ட அதிருப்தி... பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?... டெல்லி தலைமைக்கு பறந்த மெசெஜ்...!

திருப்பூர் தெற்கு தொகுதியை ஏ.பி முருகனத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை குரல் எழுப்பியதாகவும், ஆனால் பாஜக்க மாநில தலைமை அதனை ஒரு விஜபி மகனுக்கு இதுக்க திட்டமிட்டுருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு தேசிய கட்சிகளுமே தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிடாதது கவனம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பாஜாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாததற்கான காரணம் வெளியாக இருக்கிறது. அதாவது தன்னுடைய ஆதரவாரர்களுக்கு சீட் கொடுப்பதில் அண்ணாமலை பிடிவாதமாக இருப்பதாகவும் கோவை வடக்கு தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், இன்னும் தேசிய கட்சிகள் அறிவிக்காமல் இருக்கிறார்கள். முக்கியமாக பாஜக இன்னும் தன்னுடைய வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அண்ணாமலையின் பிடிவாதம் என்று தகவல் கிடைத்திருக்கிறது. முக்கியமாக கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் நிற்க அண்ணாமலை விரும்பியதாகவும், ஆனால் அதிமுக தரப்பிலிருந்து கோவை வடக்கு மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கி இருக்கிறது. எனவே அந்த தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அதன் காரணமாக தனக்கு தான் விரும்பிய தொகுதி ஒதுக்கவில்லை என்ற  அதிருப்தி அண்ணாமலையிடம் இருப்பதாகவும், நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற கடிதத்தை ஏற்கனவே பாஜக தலைமைக்கும் அண்ணாமலை அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே  தனக்குதான் தொகுதி கிடைக்கவில்லை. தன்னுடைய ஆதரவாளர்களுக்காவது தொகுதி வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த வகையில திருப்பூர் தெற்கு தொகுதியை ஏபி முருகானந்தத்திற்கும், தளி தொகுதியை அமர் பிரசாத் ரெட்டிக்கும் பெற்று தர அவர் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கிணத்துக்கடவு தொகுதியை கூட தன்னுடைய ஆதரவாளர் வசந்த குமாருக்கு பெற்று கொடுக்கக்கூடிய முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அந்த தொகுதியை அதிமுக ஒதுக்கவில்லை. திருப்பூர் தெற்கு தொகுதியை ஏ.பி முருகனத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை குரல் எழுப்பியதாகவும், ஆனால் பாஜக்க மாநில தலைமை அதனை ஒரு விஜபி மகனுக்கு இதுக்க திட்டமிட்டுருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க: “உனக்கே உன் மேல நம்பிக்கை இல்ல...” - விஜயை வெளுத்து வாங்கிய சீமான்... அண்ணாமலை, இபிஎஸுக்கும் அதிரடி ரிப்ளே...!

இதனால் அப்செட் ஆன அண்ணாமலை, “நான் இந்த கட்சிக்கு இவ்வளவு பாடுபட்டிருக்கிறேன். இவ்வளவு உழைத்திருக்கிறேன். கடந்த தேர்தலில் இவ்வளவு வாக்கு சதவீதத்தை நான் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால் எனக்கும் என்னுடைய ஆதரவாளர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதுபோன்ற ஒரு நிலை நீடித்தால், நான் இந்த கட்சியில் இருந்து விலகத்தான் வேண்டும். ஏனென்றால் பாஜகவில் என்னை ஓரங்கட்டக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதேநிலை தொடர்ந்தால் பாஜகவில் என்னுடைய அரசியல் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகிவிடும். எனவே கட்சியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்திருக்கிறேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வருவதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. எனவே மே 14 அன்றுதான் வாக்கு எண்ணிக்கை அதுவரை நான் கட்சி தலைமை சொல்கிற பணிகளை எல்லாம் செய்வேன். ஆனால் இதே நிலை தொடர்ந்தால் மே 15ம் தேதி நான் கட்சியிலிருந்து விலகுவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் பேசி வருவதாக தகவல் கிடைத்தி கிடைத்திருக்கிறது. 

மேலும் கோவைக்கு உட்பட்ட ஏதாவது ஒரு தொகுதியில் அண்ணாமலை நிற்க வேண்டும் என்ற விருப்பம் இருந்து வந்த நிலையில்அதுவும் நிறைவேறாமல் போனதாக சொல்லப்படுகிறது. மாறாக மொடக்குறிச்சி அல்லது திருப்பூர் தெற்கு தொகுதியில் நிற்க வேண்டும் என பாஜக தலைமை கேட்டு கொண்டதாகவும், அதற்கு அவர் உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கோவை தொகுதியில் தான் நிறப்பேன், இல்லை என்றால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருப்பதே வேட்பாளர் பட்டியல் தாமதமாக காரணமாக  கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: வானதி ‘OUT' அண்ணாமலை ‘IN'... அதிரடி ஆட்டத்திற்கு தயாராகும் தமிழக பாஜக... டெல்லிக்கு பறந்த முக்கிய லிஸ்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share