×
 

உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த தேர்தல் கால நிகழ்வுகள் குறித்த கருத்துரைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியின் நிறைவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம் வரவேற்கத்தக்கது. காவிரியின் குறுக்கே தமிழக அரசின் ஒப்புதல் இன்றி அணை கட்டக்கூடாது என்பது விதி. இதை மீறி கர்நாடக அரசு செயல்பட்டால் அவர்கள் தண்டிக்க வேண்டியவர்கள். அணை கட்டுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தீர்மானம் மட்டும் பயன் தராது. தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்தித்து பேசி அநியாயமான முறையில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக செயல்படக்கூடாது, சிந்திக்க கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கூடா நட்புக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் அதே நிலையிலேயே இருந்தால் தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களையும் அமைச்சரவையில் இருந்து நீக்க தமிழக அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.

பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் இந்தியா முதல் நிலை நாடாக உருவாக வேண்டும், தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற இரண்டு உயர்ந்த லட்சியங்களுக்காக கட்சியில் சேர்ந்தவர்கள். அதனால் இந்த நிலைக்கு மாறாக எந்த நிலையில் அவர்கள் எடுக்க மாட்டார்கள். 2029 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று நான்காவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்க வேண்டும். அந்த ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்க வேண்டும். வந்த வெள்ளம் இருக்கின்ற வெள்ளத்தை கொண்டு சென்றுவிட்டது என்ற நிலை பாஜகவில் இருக்காது. நேற்று ஆளுநர் பேசியது அவரது கருத்து கிடையாது. அரசு எழுதிக் கொடுத்த கருத்தை அவர் வாசித்துள்ளார்.

இதையும் படிங்க: Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம் எனக்கு ஏற்புடையதோ இல்லையோ. அவர்கள் ஒரு லட்சியத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருந்தவர். பொதுவுடமை கட்சியின் கருத்தும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கருத்தும் ஒன்றாக இருக்கிறது என்று சி. மகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். இந்த ஒரு வரியிலேயே அவர் காரல் மார்க்சை கொலை செய்துவிட்டார். இதைவிட கேவலமான செயல் எதுவும் இருக்க முடியாது. அவர் தலை குனிய வேண்டும்.‌ காரல் மார்ச்சின் தத்துவங்களை இத்தனை வருடங்களாக ஏற்றுக்கொண்டு இருந்துவிட்டு அது இங்கே தான் இருக்கிறது என்று சொல்வது வேடிக்கைக்கு உரியது. அதற்கு பதில் இல்லை என்று சொல்லி இருக்கலாம் என்று கூறினார்.
 

இதையும் படிங்க: தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share