18 செல்போன்கள், 3 லேப்டாப்கள்... கொத்தாய் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்... அன்பில் மகேஷுக்கு நாளை காத்திருக்கும் அதிர்ச்சி...!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கல்வி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளன.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கடந்த ஜூன் மாதம், பி.டி. அரசகுமார் என்பவர் தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகவும், அதேபோன்று டிசிபி அனுமதி உள்ளிட்ட பிற அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகவும் கூறி 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ஃபெடரேஷன் அசோசியேஷன் ஆஃப் பிரைவேட் ஸ்கூல் என்ற அமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இதையும் படிங்க: கொடநாடு வாசல்ல வாட்ச்மேன் மாதிரி நின்னவரு! இன்னைக்கு திமுகவையே எதிர்க்கிறாரு? விஜயை விமர்சித்த அன்பில் மகேஷ்!
இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஜூன் 27ஆம் தேதி பி.டி. அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர். இதனையடுத்து, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது இந்தத் துறையின் அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும், இந்த விவகாரங்கள் நடைபெறுவதற்கு அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில்தான் சென்னை, திருச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது சோதனை மேற்கொண்டனர், இதுவரை 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கல்வி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இதுவரை 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடமிருந்து பல கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் இந்த நிதி மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலை தொடங்கி மாலை வரை சோதனை நடத்தினர்.
குறிப்பாக, பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம், டிபிஐ வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், அரசு அலுவல்களுக்கு தேவையான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில்தான் இன்று காலை முதல் அவருடைய வீடு, அதேபோன்று திருச்சியில் உள்ள அவருடைய வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய ஒன்பது இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் செல்போன்கள் 18, லேப்டாப் மூன்று, பென் டிரைவ் எட்டு டெஸ்க்டாப் இரண்டு டேப் மற்றும் Apple iPad கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 118 ஆவணங்கள், 13 செல்போன்கள், ஹார்டு டிஸ்குகள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த டிஜிட்டல் ஆவணங்களில் என்ன இருக்கிறது என ஆராய்ந்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
நாளை விசாரணைக்கு ஆஜராகும் படி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறிப்பதா.? இதுதான் ஜனநாயகன் ஆட்சியா.? விளாசிய சீமான்..!!