×
 

காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்கள் நடுவே நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கும் வகையில் “வாக்கிங் பிரச்சாரம்” மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்தது முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேரத்தை அமைதி நேரமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் வேட்பாளர்கள், கட்சித்தொண்டர்கள் நேரடியாக மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யவும், ஊர்வலமாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்கள் நடுவே நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கும் வகையில் “வாக்கிங் பிரச்சாரம்” மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டன் ஆன அவிநாசி... திடீரென சாலையில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த காரியம்... !

பொதுக்கூட்டங்கள், மேடைகள் என்பவற்றைத் தாண்டி, தெரு தெருவாக நடந்து சென்று பொதுமக்களை சந்திப்பது இந்த பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும் இந்த நடைபயணங்களில், அவர் வீடுகளுக்குள் சென்று மக்களிடம் நேரடியாக பேசி, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டு வருகிறார். 

திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் இந்த வாக்கிங் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார். அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் சிற்றரசுவை ஆதரித்து ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரி்ப்பில் ஈடுபட்டார். முதலமைச்சரை நேரில் கண்ட மக்கள் ஆர்வத்துடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது அவர்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

 

 

 

இதையும் படிங்க: “தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share