போலீஸ் எங்களை அலர்ட் பண்ணி இருக்கலாம்?! கரூர் துயரத்திற்கு அவங்க தான் காரணம்! - முதல்வர் விஜய்!!
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்து, அவர்களுக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
கரூர்: கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் இன்று பங்கேற்றார். விபத்து ஏற்பட்டு ஒரு வருடம் நெருங்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பணி ஆணைகளை அவர் நேரில் வழங்கினார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், கரூர் விபத்துக்கு காவல்துறையின் பங்கு முக்கியமானது என்று குற்றம் சாட்டினார். “அரியலூரில் நிகழ்ச்சி முடித்த பிறகு பெரம்பலூர் போலீசார் எங்களை அலர்ட் செய்தனர். கூட்டம் அதிகம், வராதீர்கள் என்றனர். மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச்சியை ரத்து செய்தோம்” என்று கூறிய அவர், கரூர் விவகாரத்தில் போலீசார் எச்சரிக்கை செய்யவில்லை என்று விமர்சித்தார்.
மேலும், “நாமக்கல் நிகழ்ச்சி முடிந்து கரூர் வரும்போது கரூர் போலீசார் எங்களை அலர்ட் செய்திருக்கலாம். எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம், வராதீர்கள் என்று சொல்லியிருக்கலாம்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி! 32 பேருக்கு மட்டுமே அரசுப்பணி!! காரணம் இதுதான்!
ஆனால் அதை செய்யாமல் நெடுஞ்சாலையில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு போலீசாரே அழைத்துச் சென்ற நாடகம் நடந்தது” என்று வலியுறுத்தினார். “நான் பேசும்போது போலீசாருக்கு நன்றி சொன்னேன். இப்படி ஒரு நாடகம் நடக்கும் என எனக்கு தெரியாது” என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
“இந்த இடத்தை எடுத்துக்கொள்ள சொல்லி ஒரு போலீஸ் அதிகாரி பேட்டி கொடுப்பதற்கு என்ன அர்த்தம்?” என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் விஜய், கூட்டத்துக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என்றும் சந்தேகம் எழுப்பினார். இந்த விபத்துக்கு யார் காரணம், யார் உத்தரவு கொடுத்தது என்பது குறித்தும் அவர் மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தரப்பினரும், எதிர்க்கட்சிகளும் காவல்துறையினரையே முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர். அப்போதைய தி.மு.க. அரசின் தூண்டுதலில் இது நடந்ததாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனினும், இதுவரை காவல்துறை தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார். கரூர் விபத்து தமிழக அரசியலில் இன்னும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் உண்மை காரணங்கள் விரைவில் வெளியாக வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியில் டிஜிட்டல் புரட்சி! ஸ்லைடு, வீடியோ தயாரிப்பாளர்களுக்கு திடீர் டிமாண்ட்!