×
 

ஸ்மைல் ப்ளீஸ் நண்பா!! போட்டோகிராஃபர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! சட்டசபையில் சுவாரஸ்யம்!

புகைப்பட கலைஞர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், புகைப்படக் கலைஞர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது. வழக்கமாக அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தங்களது கேமராக்களில் பதிவு செய்யும் புகைப்படக் கலைஞர்களை, இந்த முறை முதலமைச்சர் விஜயே தனது கேமராவில் பதிவு செய்தது அங்கிருந்தவர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கலையின் வரலாறு, அதன் வளர்ச்சி மற்றும் சமூகத்தில் புகைப்படங்களின் தாக்கம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையிலும், புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையிலும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

புகைப்படத் துறையின் ஆரம்பகால வளர்ச்சியில் பிரான்சை சேர்ந்த லூயிஸ் டாகுவேரே மற்றும் ஜோசப் நைசிபோர் நியேப்ஸ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. 1839-ம் ஆண்டு டாகுவேரியோடைப் எனப்படும் புகைப்பட முறையை உலகம் அறிந்தது.

இதையும் படிங்க: ஒண்டிவீரன் நினைவு நாள்! ஒரு கையை இழந்தும் போராடிய வீரன்! முதல்வர் விஜய் புகழாரம்!

இதன் பின்னர் புகைப்படத் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று, இன்று அனைவரது கைகளிலும் உள்ள செல்போன் கேமரா வரை வந்துள்ளது.

 

World Photography Day, Chief Minister Joseph Vijay delighted photographers by taking photographs of them on the 19th. pic.twitter.com/DUuKYfyuC9

— Vignesh Theni (@Vignesh_twitz) August 21, 2026

இந்த நிலையில், உலக புகைப்பட தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய், புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக அவர்களை நேரில் சந்தித்த அவர், அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

இதில் சுவாரஸ்யமான தருணமாக, புகைப்படக் கலைஞர்கள் முதலமைச்சர் விஜயை படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, அவர்களையே விஜய் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்தார். இதனால் அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

வழக்கமாக கேமராவின் மறுபுறம் நிற்கும் புகைப்படக் கலைஞர்களை, இந்த முறை கேமராவின் முன்புறத்துக்கு கொண்டு வந்த விஜயின் இந்த செயல் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பின்னர் அவர்களுடன் விஜய் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

உலக புகைப்பட தினத்தில் புகைப்படக் கலைஞர்களின் பணியை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த எளிமையான சந்திப்பு, சட்டசபை சார்ந்த நிகழ்வுகளில் இடம்பெற்ற சுவாரஸ்யமான தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: நீங்க அத கவனீச்சீங்களா?! அமித்ஷாவுக்கு முதல்வர் விஜய் கொடுத்த கிஃப்ட்! மூடிய பையில் கொடுத்த பரிசு என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share