முதல்வர் விஜய் பாதுகாப்புப் பணியில் திடீர் பரபரப்பு! 2 போலீஸ் அதிகாரிகள் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி!
மயங்கி விழுந்த இரு சிறப்பு உதவி ஆய்வாளர்களும் ஏற்கனவே இருதய பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விஜய் சேலம் வந்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான தண்ணீரை திறந்து வைத்த நிலையில், அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தொப்பூர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று சேலம் வந்தார். இதையொட்டி அவரது பயணப் பாதை மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதலமைச்சரின் நிகழ்ச்சி மற்றும் அணை திறப்பு நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களான ராஜேந்திரன் மற்றும் மது ஆகிய இருவரும் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!
இதை பார்த்த சக போலீசார் உடனடியாக இருவரையும் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருவரும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மயங்கி விழுந்த இரு சிறப்பு உதவி ஆய்வாளர்களும் ஏற்கனவே இருதய பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தற்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவுக்கான காரணம் குறித்து மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜயின் சேலம் பயணத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த 2 போலீஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைத்து நிகழ்ச்சியை நிறைவு செய்த பின்னர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரில் இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் உடல்நிலை குறித்த மருத்துவர்களின் அடுத்தடுத்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: 7-வது நாளாக தொடரும் போராட்டம்! முதல்வர் எங்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? தூய்மை பணியாளர்கள் கேள்வி!