×
 

ராகுல் காந்தியும் வரல!! தேர்தல் காசும் வரல!! திமுக - காங் நிர்வாகிகள் அப்செட்!

கோடிக்கணக்கில் செலவு செய்ய தயார் என வாக்குறுதி தந்துவிட்டு, ' சீட்' வாங்கிய காங்கிரஸ் வேட்பாளர்கள், தேர்தல் செலவுக்கு பணத்தை அவிழ்க்காமல் இருக்கின்றனர்.

கோவை: காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிருப்தி! கோடிக்கணக்கில் செலவு செய்வதாக வாக்குறுதி அளித்து சீட் பெற்ற 28 வேட்பாளர்களும், தேர்தல் செலவுக்கு பணத்தை அவிழ்க்க மறுப்பதாக கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது நடைபெற்ற நேர்காணலில், ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் வரை தேர்தல் செலவு செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்தனர். ஆனால், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பிறகு பெரும்பாலானோர் தேர்தல் பணிகளுக்கு பணம் கொடுக்காமல் தவிர்த்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மட்டும் இரண்டு முறை பணப்பட்டுவாடா செய்து, கட்சியினரை உற்சாகப்படுத்தி பிரசாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மற்ற வேட்பாளர்கள் வாகனங்கள் வாடகை, தொண்டர்களுக்கு சாப்பாடு, பிரசாரப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை செலவுகளுக்குக் கூட பணம் தர முன்வரவில்லை.

இதையும் படிங்க: விஜய் சொன்னது உண்மைதான் போலயே?! காங். பொறுப்பாளர்கள் பட்டிலயில் தவெக நிர்வாகிகள் எப்பிடி?

ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு என்றால், 15 நாட்களுக்கு மட்டும் 30 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஆனால், பெரும்பாலான வேட்பாளர்கள் “தி.மு.க. அல்லது காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து பணம் வந்ததும் தருகிறோம்” என்று காலம் தாழ்த்தி வருகின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து கூறுகையில், “தி.மு.க. உடனான உறவு முன்பு போல இல்லை. தொகுதி பங்கீட்டில் தொடங்கிய மோதல், ராகுல் வராதது, செலவு வரை நீண்டுள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று விரும்பிய பலர் ஒதுங்கியதால், அவர்களின் ஆதரவாளர்கள் பணம் கொடுக்க மறுக்கின்றனர். 

மேலும், 28 தொகுதிகளுக்கும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, டில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை தேர்தல் பணி பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். வேட்பாளர்களிடம் நேரடியாக பணம் கொடுக்க டில்லி விரும்பவில்லை. கடந்த தேர்தலில் பணத்தை சுருட்டிய சம்பவங்கள் காரணமாக இந்த முறை பொறுப்பாளர்கள் வாயிலாக செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

ராகுல் காந்தி இதுவரை தமிழகத்தில் பிரசாரம் செய்ய வராதது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர்கள் சொந்த பணத்தை செலவு செய்ய மறுப்பதும், மேலிடப் பணம் பொறுப்பாளர்கள் கைக்குச் செல்வதும் கட்சியினரிடையே வெறுப்பை அதிகரித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டும் வேளையில், காங்கிரஸ் வேட்பாளர்களின் பணப் பிரச்னை கூட்டணியில் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சுங்க கட்டண உயர்வு தேவையா? மக்களை சுரண்டும் மத்திய அரசு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share