×
 

வெட்கம், மானம் இருந்தால் திமுககாரங்க வராதீங்க... நேரடி எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்...!

காமராஜர் குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை என காங்கிரஸ் நிர்வாகி கடும் விமர்சனம்

பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தற்போது திமுக தலைவர்கள் பயன்படுத்தி வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வரும் மாதம் நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் நிகழ்வுகளில் திமுகவினர் காமராஜர் சிலை அருகே வரக்கூடாது என்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று காமராஜர் கல்விக்கண் திறந்தவர், பல்வேறு சாதனைகளை செய்தவர் என்று திமுக தலைவர்கள் பேசுகின்றனர். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் காமராஜர் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போது காமராஜரின் பெருமை அவர்களுக்கு தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “தற்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் திமுக ஆட்சியில் காமராஜரை அவமதித்தவர்களை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காமராஜரின் பெயரை அரசியல் தேவைக்காக பயன்படுத்த திமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காங்., தோத்ததுக்கு காரணம் சிதம்பரமும், அவரு மகனும் தான்! உண்மை கண்டறியும் குழுவிடம் கட்சியினர் புகார்!

அவர் மேலும் கூறுகையில், “காமராஜர் மீது உண்மையான மரியாதை இருந்தால், அவரது பிறந்தநாளன்று திமுகவினர் சிலைக்கு மாலை அணிவிக்க வரக்கூடாது. காமராஜரை தொடர்ந்து அவமதித்து வந்த கட்சி திமுகதான். காமராஜர் பெயரை கூறி அரசியல் லாபம் தேட முயன்றால் அதற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம்” என்றார்.

இதனிடையே, நாட்டில் நடைபெற்று வரும் கல்வி தொடர்பான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீட், ஜேஇஇ, வியாபம் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருவதாகவும், வினாத்தாள் கசிவு, மறுதேர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் மத்தியில் அச்சமும் குழப்பமும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு தொடர்பான அழுத்தம் மற்றும் குழப்பம் காரணமாக மாணவர்கள் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது என்றும், கல்வி முறை தற்போது வணிகமயமாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதிக்கு இணையாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் பெரும் வருவாய் ஈட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் கல்வி வாய்ப்புகளாக இல்லாமல், வணிக வாய்ப்புகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், உயர்கல்வி முடித்த இளைஞர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கே நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும், பெரும்பாலானோர் தற்காலிக வேலைகளில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கல்வித் தரம், தேர்வு நடத்தும் முறை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், இதற்கான வழிகாட்டுதலை காங்கிரஸ் தலைவர் Rahul Gandhi வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண் எம்.எல்.ஏ-வுக்கு முன்னுரிமை! சோனியா காந்தி கறார்! சட்டசபை காங்., தலைவராகிறார் தாரகை கத்பட்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share