×
 

முன்னாள் தலைவருன்னு மரியாதை வேண்டாமா?... செல்வப்பெருந்தகையை அவமானப்படுத்திய காஞ்சிபுரம் கதர் படை...!

காஞ்சிபுரத்தில் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை புகைப்படம் புறக்கணிப்பு.

காஞ்சிபுரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் முன்னாள் தலைவரான செல்வப்பெருந்தகை புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அகில இந்திய காங்கிரஸ் தலைமை, மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்தது.  அந்த வகையில் காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நன்றி தெரிவிக்கும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களில், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவிப்பதுடன், புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் மாணிக்கம் தாகூரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: இன்று பதவியேற்கிறார் மாணிக்கம் தாகூர்! ராகுல் காந்தியை பிரதமராக்குவதே அடுத்த இலக்கு என உறுதி!

ஆனால், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையின் புகைப்படம் மற்றும் பெயர் மட்டுமின்றி, தற்போதைய மாவட்டத் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதன் மூலம், முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள்  அதிருப்தியில் இருந்தது வெளிப்படையாக பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.  போஸ்டர்களின் இந்த வடிவமைப்பு, காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள உள்ளூர் அரசியல் மற்றும் கோஷ்டி மோதல்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

திமுகவில் ஐக்கியமாகும் செல்வப்பெருந்தகை: 

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இழந்துள்ள செல்வபெருந்தகை திமுகவில் இணைவது பற்றி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.கடந்த சில வாரங்களாகவே இந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் செல்வபெருந்தகை கட்சியில் இணைவது தாமதமாவதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் செல்வபெருந்தகை. இவர் கடந்த 2024 ம் ஆண்டு முதல் கடந்த 8 ம் தேதி வரை செல்வபெருந்தகை காங்கிரஸ் தலைவராக இருந்தார். சட்டசபை தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக களமிறங்கி தோல்வியடைந்தார்.

தேர்தல் சமயத்திலேயே செல்வபெருந்தகை தேர்தல் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். அதன்படி செல்வபெருந்தகைக்கு பதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக செல்வபெருந்தகை கடந்த சில வாரங்களாகவே திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு பயம்?! ரயில்வே அமைச்சர் மீது சந்தேகம்! ரயிலை தவிர்த்து விமானத்தில் பறந்தார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share