×
 

“இதை செய்ய தவறினால்...” - சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை... தவெகவுக்கு சிபிஐ வைத்த செக்...!

ஏரியை பாதுகாக்க தவறினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என வீரபாண்டியன் எச்சரிக்கை.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் முதலமைச்சருக்கு வலியுறுத்தல். ஏரியை பாதுகாக்க தவறினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என வீரபாண்டியன் எச்சரிக்கை.

சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை தீர்ப்பதில் முக்கிய வகிக்கும் புழல் ஏரியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார். சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய், புழல் ஏரியில் நீர் பிடிப்பு பகுதி, குப்பைகள் கொட்டும் இடம் என ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புழல் ஏரி, சுற்றி பாதுகாப்பு சுவர் அமைத்து ஏரியை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல முறை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடிய புழல் ஏரி பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் உள்ளது என்றார். ஈமச்சடங்குகள் செய்து கழிவுகளை புழல் ஏரியில் வீசுவதாகவும், சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து கழிவு நீர் புழல் ஏரியில் கலப்பதாகவும், காலைக்கடன் முடிக்கும் மக்கள் ஏரியில் தங்களை தூய்மைப்படுத்தி கொள்வதாகவும், ஆட்சியாளர்கள் உடனடியாக இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: 2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த ஏரியை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துவதாகவும், துறை சார்ந்த அமைச்சர் இதில் கவனம் செலுத்திட வேண்டும் என்றார். சென்னை மக்களின் உயிர் போன்ற ஏரியை சீரமைக்க ஆட்சியாளர்கள் உடனே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
 

இதையும் படிங்க: எ.வ.வேலுவிற்கு இடியை இறக்கிய சி.எம்.விஜய்... நிம்மதி பெருமூச்சு விட்ட செந்தில் பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share