×
 

சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

அவரை பதவி விலக  செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்  நாளை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தான் இன்று கோட்டை மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளரிடம் கூறும்போது ,  சேலம் மாநகராட்சி விநியோகத்தை ணூயஸ்  என்ற  தனியாரிடம் ஒப்படைத்துள்ளது.
இதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே இதில் கவனம் செலுத்தி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இடதுசாரி மாணவர் அமைப்பினர் , காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்தும் போராட்டங்களை கண்காணிக்க வேண்டும் என அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  இதில் தலைமைச் செயலாளர் நடவடிக்கையை கண்டித்தும் ,  அவரை பதவி விலக  செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்  நாளை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக , அரசு சார்பில்  கார் வழங்குவது  ஏற்புடையதல்ல. அவர்களுக்கு கார் வாங்க கடனுதவி வழங்கிடம்.  கஜானா காலி என்று சொல்லிவிட்டு ,  அரசாங்க பணத்தை எடுத்து கார் வாங்க கூடாது.  இவ்வளவு பெருந்தொகையை செலவிடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை ,  இலவசமாக கார் வாங்குவது என்ற முடிவை தமிழக அரசு  மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: எங்களுக்கு கார் வேண்டாம்..! "நிதி நெருக்கடி"..! சட்டப்பேரவையில் உதயநிதி திட்டவட்டம்.!!

விவசாயிகளுடைய கடன் தள்ளுபடி பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது, ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியவர்களுக்கு 75 ஆயிரம் தள்ளுபடி என்று இறுதியாக சொல்லியுள்ளார். 
விவசாயிகளின் கடனை தள்ளுபடி  செய்ய   அரசிடம் பணம் இல்லை ,  ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க பணம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது .  இதை விவசாயிகள் அரசியல்வாதிகளை பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் இலவசமாக வழங்கும் என்ற முடிவை அரசு கைவிட வேண்டும் என்றார்..

கால்நடை தீவன விலை கடுமையாக உயர்ந்துள்ளது ,  பெட்ரோல் , டீசல் விலை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது . எனவே பால் உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் பத்து ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனால் தமிழக அரசு லிட்டருக்கு மூன்று ரூபாய் மட்டும் உயர்த்தி உள்ளது , இது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  எனவே கொள்முதல் உயர் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் படி தான் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார்..

இதையும் படிங்க: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share