×
 

அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

பிரகாஷ்ராஜ் போன்ற தனி நபர்களுக்கு கருத்து கூறினால் தினமும் ஆயிரம் பேர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழக வெற்றிக்கழக இணைப்புச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் திருநகரில் உள்ள தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக தலைவர் விஜய் மீது உயர்நீதிமன்றத்த மன்றத்தில் தவறான தகவல் குறித்த வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் இது போன்ற வழக்குகளை தேர்தல் ஆணையம் தான் விசாரணை செய்யும். கடந்த ஆண்டுகளில் பல வழக்குகளை  விசாரணை செய்துள்ளது.

நேற்று திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  ஆனால் ஒரு கோடி ரூபாய் கிடைத்ததாக தகவல்.ஆனால் 50 லட்சம் ரூபாய் மட்டும்தான் கணக்கு காட்டப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து செய்தியினர்களுக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 வருமான வரி துறையினருக்கு தகவல் கொடுத்து பணத்தை பறிமுதல் செய்தோம். செய்தி  நிறுவனங்கள் திமுக கொடுக்கும் தகவல்களை மட்டுமே பதிவு செய்கிறது.  பணம் பறிமுதல் குறித்து எஃப் ஐ ஆர் பதிவு தகவல் வெளியிட்ட பின் சில செய்தி வெளி வருகிறது. திருச்சி சர்ச்சில் விஜய் அரசியல் சின்னத்துடன் மத வழிபாடு செய்து சென்ற தகவல் குறித்து எல்லா இடங்களிலும் வழிபாடு செய்யலாம் தேர்தல் பரப்புரை தான் மேற்கொள்ளக்கூடாது . இதில் தவறு ஒன்றும் இல்லை.

இதையும் படிங்க: மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கர்... தேர்தல் பரப்புரையில் டென்ஷன் ஆன திருமாவளவன்...!

கம்யூனிஸ்ட் கட்சியினரும் சரி காங்கிரஸ் கட்சியும் சரி அவர்களின் தனித்துவத்தை இழந்து விட்டனர். முன்பு  தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்கள் இன்று குரல் கொடுக்க முடியாமல் ஆதரவு கொடுக்க  உள்ள நிலை உள்ளது. திமுகவை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையில் குரல் கொடுக்காமல் அமைதியாக உள்ளனர். அண்ணன் திருமாவளவன் போன்றவர்களும் இதே ஆதரவு நிலைகளில் எதிர்ப்பை தெரிவிக்காமல் உள்ளனர் 

 சிவகாசி உயிர் பலி குறித்த கேள்விக்கு,  தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை அவர்களின் பாதுகாப்புக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் அடிக்கடி விபத்துக்கள் இங்கு மட்டுமே நடைபெறுகிறது.

அதிக உற்பத்தியில் இருப்பதால்தான் பாதுகாப்பில்லாத தால் தான் விபத்து நடைபெறுகிறது.  இது சரி செய்வதற்காக ஒரு நடவடிக்கையும் திமுக அதிமுகவும் எடுக்கவில்லை. உயிர்வாழ ஜீவனத்திற்காக 500, ஆயிரம் கிடைத்ததாக உயிரை பலியிடும் நிலை மிகவும் கொடூரமானது.அவர்களுக்கு விபத்து காப்பீடு கிடையாது.அப்பாவி பெண்கள் ஆண்கள் தங்களின் வாழ்வதற்காக சென்று உயிரிழக்கும் நிலை உள்ளது. 

 விஜய் நடித்து ஆஸ்கர் வாங்கினால் பாராட்டுவேன் ஆனால் மக்களிடம் நடிக்க வேண்டாம் என பிரகாஷ் ராஜ் கேள்விக்கு?,  பிரகாஷ்ராஜ் போன்ற தனி நபர்களுக்கு கருத்து கூறினால் தினமும் ஆயிரம் பேர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். அனைவருக்கும் இறுநூற்றி முத்து பத்து நாலு தொகுதிக்கும் விஜய் செல்லாததால் வேட்பாளருக்கு பாதிப்பு ஏற்படுமா ?

 எங்களுடைய டைய நிகழ்ச்சிகளை காவல் துறையினர்  கேன்சர் செய்கிறார்கள் திமுக அதிமுக போன்ற கட்சிகளுக்கு கேன்சல் செய்வதில்லை.  தவெக தலைவர் மற்றும் வேட்பாளர்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.  500, 1000 கொடுத்தாலும் மக்கள் தக்க பாடம் கொடுப்பார்கள். ஒவ்வொரு பூத்திலும் உள்ள தொண்டர்கள் பணியாற்றியுள்ளனர் 

 நம் திருமாவளவன் அவர்களுக்கு எதுவும் எடுபடவில்லை இந்த தேர்தல் தனித்துவத்தை இழந்து யாருக்கான முகமாக இருக்கிறார் அவற்றை ஒதுக்கி சென்றதால் அவர்கள் கைவிட்டுள்ளனர் .
 வைகோ அவர்களை போன்று திருமாவின் வாழ்க்கையை முடித்து வைத்துள்ளனர் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

  அதிமுகவிற்கு தலைவர் எடப்பாடியா?,  அமித்ஷாவா?. தேர்தல் முடிய வாக்குப்பதிவு நாள் நெருங்க மக்கள் புறக்கணித்து உள்ளதால் ஆதங்கத்தில் பேசுகின்றனர்.  இது பொருந்தாத கூட்டணி அண்ணாமலை எடப்பாடியை ஒழிக்க நினைத்தார் எடப்பாடி அண்ணாமலையை ஒழிக்க நினைத்தார் அதேபோல் டிடிவி எடப்பாடியை ஒழிக்க நினைத்தார் எடப்பாடி டிடிவியை ஒழிக்க நினைத்தார் இது போன்றது தான் அதிமுக கூட்டணி என்றார். 

 

இதையும் படிங்க: பாஜகவின் பிடியில் அதிமுக; ஓட்டு பிரிக்கவே விஜய் அரசியல் - திருமாவளவன் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share