×
 

மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கர்... தேர்தல் பரப்புரையில் டென்ஷன் ஆன திருமாவளவன்...!

மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கரும் அவர் எழுதிய அரசமைப்பு சட்டமும்தான் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு

மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கரும் அவர் எழுதிய அரசமைப்பு சட்டமும்தான்
மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் காங்கிரஸோடு இணைந்து நிற்க வேண்டும் என்று மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி மணல்மேடு கடைவீதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார் 

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனூஸை ஆதரித்து மணல்மேடு கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கரும் அவர் எழுதிய அரசமைப்பு சட்டமும்தான் என்றார்.

மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் காங்கிரஸோடு இணைந்து நிற்க வேண்டும். மோடி தொடர்ந்து பிரதமராக நீடித்தால் இந்த நாட்டுக்கு ஆபத்து என்பதை விட அரசமைப்பு சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும். மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கரும் அவர் எழுதிய அரசமைப்பு சட்டமும்தான் என்றார்.

இதையும் படிங்க: பாஜகவின் பிடியில் அதிமுக; ஓட்டு பிரிக்கவே விஜய் அரசியல் - திருமாவளவன் விமர்சனம்!

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நான் காங்கிரஸில் பயணிக்கிறேன். ஜாதி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் உயர்வு தாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜக கனவு இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உள்ளது. விஜயோடு போயிருந்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம் இதையெல்லாம் திருமாவளவன் செய்யவில்லை.

மூப்பனார் ஜெயலலிதா ஸ்டாலின் உள்ளிட்டவர்களுடன் 25 ஆண்டு காலம் அரசியல் செய்தவன் நான் சீட்டுக்காக என் முடிவை மாற்றவில்லை காரணம் மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டை பாதுகாக்க முடியும் என்பதால் தான் என்றார்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் சேரா? வேணாவே வேணாம்பா!! பதறிப்போய் திருமாவளவனை தடுத்த அமைச்சர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share