×
 

பரபரக்கும் அரசியல் களம்.. மக்கள் உரிமை மீட்பு 2.0 - லோகோவை வெளியிட்ட தேமுதிக..!!

தேமுதிக சார்பில் கடலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 9ம் தேதி நடைபெற இருக்கும் மக்கள் உரிமை மீட்பு 2.0 மாநாடு லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பில், வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாசார் கிராமத்தில் “மக்கள் உரிமை மீட்பு 2.0” மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு மாலை 2:45 மணிக்கு தொடங்க உள்ளது.

தேமுதிக தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி, இந்த மாநாடு கட்சியின் அரசியல் எழுச்சியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும், மக்களின் உரிமைகளை மீட்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இம்மாநாட்டில் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். கட்சியின் நிறுவனர் மறைந்த விஜயகாந்தின் அரசியல் பயணத்தை முன்னிறுத்தி, தேமுதிகவின் மக்கள் நலக் கொள்கைகளை வலியுறுத்துவதற்கு இந்த மாநாடு முக்கிய தளமாக அமையும்.

இதையும் படிங்க: விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

மாநாட்டில் தேமுதிகவின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். கட்சியின் முதல் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இரண்டாம் கட்ட பயணம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிரேமலதா கூறியுள்ளார். மேலும், விஜயகாந்தின் நினைவாக சென்னையில் 100 அடி சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படலாம்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் இந்த மாநாடு, தேமுதிகவின் மக்கள் ஆதரவை வலுப்படுத்துவதற்கும், 2026 தேர்தலில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று மாநாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும் என தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த மாநாட்டிற்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது. இது கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டின் லோகோ வடிவமைப்பு, தேமுதிகவின் கொள்கைகளையும், மக்களின் உரிமைகளை மீட்கும் உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் லோகோ வெளியீடு, கட்சியின் அரசியல் பயணத்தில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி குறித்து நான் அப்படி பேசல! விளக்கம் கொடுத்த பிரேமலதா... விமர்சிக்கும் இணையவாசிகள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share