"மா" விவசாயிகளை வஞ்சிக்காதீங்க.. நஷ்ட ஈடு வழங்குக.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!
மாம்பழ விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில், குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் மாம்பழ விவசாயிகள் தற்போது கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். 2025-ஆம் ஆண்டு மாம்பழ விலை வீழ்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சனைகளால் அவர்கள் தவிக்கின்றனர். மாம்பழத்திற்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. உதாரணமாக, வேலூர் மாவட்டத்தின் பரதாமியில் விவசாயிகள் மாம்பழங்களை டன் ஒன்றுக்கு ₹4,000 மானியமாகவும், குறைந்தபட்ச ஆதார விலையாக ₹15,000 நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த ஆண்டு மாம்பழ உற்பத்தியில் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர், இதனால் பலர் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு நிவாரணம் கோரியும், ஆந்திர மாநிலத்தைப் பின்பற்றி, மானியத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாம்பழங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: துணை நடிகைகளுடன் டான்ஸ் ஆடும் சேகர்பாபு.. வெட்கமா இல்லையா..? பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!
இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனையில் ஆளும் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
தமிழ்நாட்டில் இந்த (2025) ஆண்டு 'மா' (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேபோல் தர்ப்பூசணி பழம் பருவகாலங்களின் விளைச்சலின் போதும், தர்ப்பூசனியில் மருந்து கலந்து உள்ளது என்று வதந்திகளை பரப்பியதால் மிகக் குறைந்த விலைக்குப் போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இப்படி தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு உரியவிலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் மிகவும் துயரமான ஒரு நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக விவசாயிகள் பிரச்சனையில் கவனம் செலுத்தி, அவர்கள் விளைவித்த பொருளுக்கான உரிய விலையை கிடைக்கச் செய்ய வேண்டும். மாம்பழ விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு இந்த அரசு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துணை நடிகைகளுடன் டான்ஸ் ஆடும் சேகர்பாபு.. வெட்கமா இல்லையா..? பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!