×
 

குட்டி ப்ளைட்டும்! ஸ்டார் ஹோட்டல் ரூமும் கொடுத்திருங்க!! பிரசாரத்திற்கு வர டிமாண்ட் செய்யும் கமல்! திமுக அப்செட்!

கமல் மற்றும் பிரேமலதாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‛கேரவன்'கள், சும்மா கிடப்பதாக கட்சியினர் புலம்புகின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள் பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன. தே.ஜ. கூட்டணியைப் போலவே இங்கும் அதிருப்தி அதிகரித்து, பிரசாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதும், சில கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் சில தொகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா பிரசாரம் செய்யாதது, வட மாவட்டங்களில் தி.மு.க. வேட்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு தே.மு.தி.க. ஓரளவு பலம் வாய்ந்த நிலையில் இந்த அலட்சியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேபோல், வி.சி.க. தலைவர் திருமாவளவனை பொது தொகுதிகளில் பிரசாரம் செய்ய தி.மு.க. அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலர் துரைமுருகன், வி.சி.க. மாவட்டச் செயலரை பிரசார வாகனத்தில் இருந்து இறங்கச் சொன்ன சம்பவம் இன்னும் மறக்கப்படவில்லை. 

இதையும் படிங்க: கடுகடுக்கும் கரூர் மக்கள்! புறக்கணிக்க முடிவு? செந்தில்பாலாஜி கோவை தாவியதன் பின்னணி!

இதனால் பல இடங்களில் வி.சி.க. நிர்வாகிகள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு பிரசாரத்தை தவிர்த்து வருகின்றனர். மேலும் திருமாவளவன் தேர்தலில் போட்டியிடுவதால், தனது நிர்வாகிகளை காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவும் அவரது மகன் துரையும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காகவே பிரசாரம் செய்ய முனைந்துள்ளனர். கம்யூனிஸ்ட் தலைவர்களும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு கொடுப்பது சந்தேகம்தான் என்கிற கருத்து நிலவுகிறது.

போதாக்குறைக்கு, தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள கமல், பிரசாரத்துக்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளார். முக்கிய நகரங்களில் மட்டும் பிரசாரம் செய்வேன், சிறு விமானம் தேவை, நட்சத்திர ஹோட்டலில் தனி தளம் ஒதுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் கூட்டணியில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் கமல் மற்றும் பிரேமலதாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கேரவன்கள் இப்போது வெறுமையாக நிற்கின்றன என கட்சியினர் புலம்புகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த உள் மோதல்கள், ஒற்றுமையை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. கூட்டணி கட்சிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாதபோது தி.மு.க. எப்படி வெற்றியை உறுதி செய்யும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி! கண்ணீர் வடிக்கும் வைகோ! திமுக கூட்டணியில் சிரித்துக் கொண்டே அழும் மதிமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share