×
 

#BIG BREAKING தலைகீழ் திருப்பம்... கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்... எவ்வளவு தொகுதிகள்?

காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக சில இழுபறி நிலை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அரசியல் வட்டாரங்களே அதிரும் அளவிற்கு திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 40 தொகுதிகளை கோரிய நிலையில், திமுக தரப்பில் சுமார் 28 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

சட்டபேரவைத் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தனர்.இதற்கு முன்பு டி.ஆர். பாலு தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சி பேச்சுவார்த்தைக் குழுவுடனும், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்று கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கி பல்வேறு கட்சிகளுக்கான அந்த தொகுதி பங்கீடுகள் என்பது செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் திமுக காங்கிரஸ் இடையே தற்போது தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 

இதையும் படிங்க: எதிரிகளுக்குள் செம டீலிங்… என்னால பிழைப்பு போய்டுச்சாம்..! திமுக, அதிமுகவை விளாசிய விஜய்..!!

முதலில் மாநிலங்களவை இடத்திற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடம் தொடர்பான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையக்கூடிய நிலையில் அதற்கான வேகம் என்பது கூடியிருக்கிறது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மாநிலங்களவை இடம் தொடர்பான ஒப்பந்தம் முதலில் கையெழுத்தாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளது. 

காங்கிரஸ் திமுக இடையேயான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து  தாமதம் மற்றும் பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வந்த நிலையில தற்போது இந்த கூட்டணி இறுதியாகி இருக்கிறது. திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி என்பது கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இடையில் இரண்டு ஆண்டுகள் மட்டும் கூட்டணியில் பிரிவு இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து வருகின்றன. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இப்போது இந்த கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில தற்போது வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share