“விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது...” - தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்...!!
கடந்த ஒரு மாதத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என கீதா ஜீவன் காட்டம்
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, குறைகளை சுட்டிக்காட்டும் மூன்று செய்தி சேனல்களை முடக்கி இருக்கிறார்கள் இது என்ன நியாயம்? ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய செய்தி சேனலாக இருக்கட்டும் பத்திரிகையாக இருக்கட்டும் ஆட்சிக்கு நல்லது கெட்டது இது ஆட்சியினால் ஒரு பலம் இருக்கிறது என்பது சுட்டிக்காட்டுவது பத்திரிகையாளர்களின் கடமை அதைக் கூட செய்தியை முடக்குவது என்பது மிரட்டி உருட்டி அச்சு ஒருத்தி அடக்கி விடலாம் என நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கீதாஜீவன் கூறினார்.
ஆதவ்அர்ஜுனா சொல்வது எல்லாம் பொய் ஏதாவது உண்மைக்கு புறம்பாக சவுடால் பேச்சு தான் பேசிக் கொண்டிருக்கிறார் உண்மை நிலைமை என்பது தெரியாது நானும் ஒரு வீடியோ பார்த்தேன் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியரிடம் பேசுகிறார் தாகா மாவட்ட செயலாளர் நாங்கள் தான் நாங்கள் சொல்லும் ஆசிரியரைதான் பணி நியமனம் செய்ய வேண்டும் என சொல்கிறார்கள் எங்கள் ஆட்சி காலத்தில் ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது பெற்றோர் ஆசிரியர்களாகத்தில் ஆசிரியர்கள் தான் யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் இந்த அளவிற்கு எல்லா தளங்களிலும் அவர்களுடைய கட்சிக்காரர்களின் அட்ரஸை அதிகமாக இருக்கிறது முதலமைச்சர் என்ன செய்வார் என்பது தெரியவில்லை நம்முடைய ஊரைச் சார்ந்த இந்த பெண் இன்று கூட சென்னை தலைமைச் செயலகம் சென்று பார்க்க போயிருக்கிறார் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்கும் என அழைக்கிறார்கள் தாவா எம்எல்ஏ அந்தப் பெயரைச் சொல்லிக் கூட இன்று வரை வீட்டில் போய் மிரட்டுவது அச்சுறுத்துவது போன்ற நிலையில் தான் இருக்கிறார்கள் நியாயம் கிடைக்கவில்லை அந்த பெண்ணுக்கு என கீதா ஜீவன் கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரத்திலேயே அந்த பெண்ணுக்கு லாட்டரி விட்டால் நல்ல பணம் வரும் என சொல்லித்தான் அழைத்துச் சென்று இருக்கிறார்கள் கள்ளத்தனமாகவும் மறைமுகமாகவும் இருக்கக்கூடிய லாட்டரி தற்போது லாட்டரி உரிமையாளர் தான் பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால் லாட்டரி மூலமும் ஏழை எளிய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும் என்று அச்சத்தில் இருக்கிறார்கள். ஒரு மாத கால ஆட்சியிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த ஆட்சியில் சிஎம் சார் சிஎம் சார் என கூறினீர்கள். இப்போது தனிமனித ஒழுக்கம் என கூறுகிறீர்களே இது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விஜய் ரசிகை பாலியல் வன்கொடுமை..! உண்மையாகவே அக்கறை இருக்கா முதல்வரே.? விளாசிய உதயநிதி..!
பெண்கள் துணிந்து புகார் தர முன் வந்ததற்கு காரணமே முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தான் தற்போது இருக்கக்கூடிய முதல்வர் அவரது கட்சியில் உள்ள பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை அதற்கு கூட நீதி வழங்கப்படவில்லை என்றால் எந்த பெண் புகார் தர முன் வருவார் என கேள்வி எழுப்பினார்
இதையும் படிங்க: "கரூர் பெருந்துயரம்"..! மீண்டும் விசாரணையை முடுக்கிய சிபிஐ..! களமிறங்கிய அதிகாரிகள்..!!