×
 

சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள் அமைச்சர்...!

விஜய் அரசுக்கு சுயபுத்தி இருக்கனும், இல்லை என்றால் சொல்புத்தி இருக்கணும் யாரு பேச்சை கேட்டு ஆடுகிறார் என்று தெரியவில்லை

விஜய் அரசுக்கு சுய புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. நாம் ஜனநாயக நாட்டில் இருக்கின்றோமா அல்லது சர்வாதிகாரி ஆளுகின்ற நாட்டில் இருக்கிறோமா? என திருப்பத்தூரில் உதயநிதி கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான KR பெரியகருப்பன் உள்ளிட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து திருப்பத்தூர் டிஎஸ்பி சண்முகசுந்தரன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம், ஜனநாயகத்தை தவெக அரசு படுகொலை செய்துள்ளது, போலீஸ் அராஜகம் ஒழிக உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.  சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் உட்பட திமுகவினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது செய்தியாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில்,  திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-க்கும் முன்பே கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.  தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசு, அனைத்துக் கட்சிகளையும் கூட்டி நாங்கள் கர்நாடகாவில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காண்பித்துள்ளது. ஆனால் தண்ணீர் பெற வேண்டிய தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் எதையும் கூட்டாமல் தவறான நடவடிக்கை எடுத்ததன் மூலமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING: உதயநிதியை இன்றே விடுவிக்க ஆணை..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

திமுகவின் ஆர்ப்பாட்டத்தை கண்டு அஞ்சிய விஜய் அரசு தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரை சட்ட விரோதமான முறையில் கைது செய்துள்ளது. நீதிமன்றத்தில் 12 மணி வரை கைது செய்யகூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தியும், காலை 11 மணிக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் உதயநிதியை கைது செய்தது கண்டிக்கதக்கது. எஞ்சியவற்றை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் நாம் ஜனநாயக நாட்டில் இருக்கின்றோமா அல்லது சர்வாதிகாரி ஆளுகின்ற நாட்டில் இருக்கிறோமா என்று ஐயம் உள்ளது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத கையாலாகாத விஜய் அரசு, இதை மடைமாற்றம் செய்யும் வகையிலும், திசை திருப்புகின்ற வகையிலும் இன்றைக்கு உதயநிதியை கைது செய்துள்ளது.  விஜய் அரசுக்கு சுயபுத்தி இருக்கனும், இல்லை என்றால் சொல்புத்தி இருக்கணும் யாரு பேச்சை கேட்டு ஆடுகிறார் என்று தெரியவில்லை சட்டம் படி எதிர்கொள்வோம் என்றார்

இதையும் படிங்க: "உதயநிதிக்கு வக்கிரபுத்தி"..! MLA-க்கு கூட தகுதியில்ல..! விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share