×
 

தேர்தல் முடிவு சாதகமில்லை என்றால் தவெகவுக்கு தாவ தயார்!! ஹிட் லிஸ்டில் 20 பேர்!! திமுக தலைமை கலக்கம்!!

தி.மு.க., தலைமை மீதான அதிருப்தி காரணமாக, 20க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், கட்சி தாவ முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தி.மு.க. கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும், 20க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவ தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தியே இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் 164 வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்ட நிலையில், பல முக்கிய தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சில அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் மனஉளைச்சலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் மாற்று அரசியல் வாய்ப்புகளை ஆராயத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தலைமையின் சமாதான முயற்சியால் சிலர் தற்காலிகமாக அமைதியாக இருந்தாலும், எதிர்காலம் குறித்து அவர்களிடம் உறுதி இல்லாத நிலை தொடர்கிறது.

இதையும் படிங்க: தேர்தல் பணியில் சொதப்பிய நிர்வாகிகள்! மு.க.ஸ்டாலின் கோவம்!! மாவட்ட நிர்வாகிகளை தூக்கி அடிக்க உத்தரவு!

அதேபோல், சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் கடும் விரக்தியில் உள்ளனர். சிலர் கட்சி பதவிகளை விட்டு விலகியதுடன், குடும்பத்தினரை வேறு கட்சிகளில் இணைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. கூட்டணி காரணமாக சில தொகுதிகள் மாற்றுக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதும் உள்ளக எதிர்ப்பை அதிகரித்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்களின் குடும்பத்தினரே தேர்தலில் ஆர்வம் காட்டாத நிலை உருவாகியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, பண பலம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சூழலில், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து கட்சி தாவும் எண்ணம் கொண்டோர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அதிருப்தியில் உள்ளவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு கட்சி தலைமையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

தேர்தல் முடிவு சாதகமாக அமையாவிட்டால், கட்சிக்குள் பெரிய அளவில் மாற்றங்கள் மற்றும் பிரிவுகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share