×
 

கனிமொழிக்கு போட்டியாக களமிறங்கிய சபரீசன்! தூத்துக்குடியில் மாப்பிள்ளை ரவுண்டப்! குழப்பத்தில் நிர்வாகிகள்!

முதல்வரின் மருமகன் சபரீசன் துாத்துக்குடிக்கு வந்து அங்கிருக்கும் நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து பேசி, தேர்தல் கள நிலவரம் மற்றும் மக்கள் மத்தியில் கட்சி மற்றும் ஆட்சி மீதான செல்வாக்கு குறித்தெல்லாம் கேட்டிருக்கிறார்.

திமுகவில் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக சமீபத்தில் எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு அவர் முழு பொறுப்பு ஏற்றுள்ளார். தேர்தல் 2026-ஐ வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் கனிமொழி தீவிரமாக களப்பணி செய்து வருகிறார்.

அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி முடித்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினரிடையே நிலவும் முரண்பாடுகளை களைந்து வருகிறார்.

குறிப்பாக திருநெல்வேலி ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட செயலர் கிரஹாம்பெல் இடையேயான மோதலை இரு தரப்புடனும் பேசி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இதனால் தென் மண்டலத்தில் கனிமொழியின் பணிகள் பாராட்டப்படுகின்றன.

இதையும் படிங்க: திமுக ஓட்டு வங்கியில் தவெகவால் ஓட்டை விழும்! காங்., கழட்டிவிட்டால் மொத்தமும் காலி!! உளவுத்துறை ரிப்போர்ட்!

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்து தங்கியுள்ளார். கட்சியின் பல முக்கிய நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசியுள்ளார். தேர்தல் கள நிலவரம், மக்கள் மத்தியில் கட்சி மற்றும் ஆட்சியின் செல்வாக்கு, உள்ளூர் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்துள்ளார்.

இந்த சந்திப்புகள் திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தூத்துக்குடி, நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூறுகையில், “கனிமொழி ஏற்கனவே இதே விவகாரங்களை நிர்வாகிகளிடம் கேட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

அதே நேரத்தில் முதல்வரின் மருமகன் அதே கேள்விகளை கேட்டு நிர்வாகிகளை சந்திப்பது, கட்சியில் இரு மையங்கள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது தவறில்லை என்றாலும், குழப்பத்தை உருவாக்குகிறது” என்று புலம்புகின்றனர்.

கனிமொழி தென் மண்டலத்தில் கட்சியை ஒருங்கிணைத்து வெற்றி பெறும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, இதுபோன்ற தனி சந்திப்புகள் கட்சி ஒற்றுமைக்கு சவாலாக அமையும் என்ற அச்சம் நிர்வாகிகளிடம் உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவில் தென் மண்டலத்தில் ஏற்படும் இந்த உள் இயக்கங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கட்சி தலைமை இதை எப்படி கையாளப் போகிறது என்பது இனி தெரியவரும். 

இதையும் படிங்க: திமுக ஓட்டு தவெகவுக்கு போகும்! வெற்று திட்டங்களால் மக்கள் கோவம்! ஸ்டாலின் மீது அன்புமணி புகார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share