திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!
அமைச்சர்களுக்கே தெரியாமல் மகளிர் உரிமைத் தொகை ரூ 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
எதிர்க்கட்சிகள் யோசித்து முடிப்பதற்கு முன் முதலமைச்சர் ஒரு படி முன்னதாக யோசித்து அமைச்சர்களுக்கே தெரியாமல் மகளிர் உரிமைத் தொகை ரூ 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் விழுதுகள் திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகள் மறுவாழ்வு சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு சேவை மையத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ 2 கோடியே 14 லட்சம் மதிப்பில் வடம்போக்கி தெருவில் சாலை அமைக்கும் பணிகளையும், அமைச்சர் துவக்கி வைத்தார்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் விளையாட்டு அணி வீரர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், செஸ், சிலம்பம் உள்ளிட்ட 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதையும் படிங்க: ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!
நம்முடைய முதலமைச்சரும் துணை முதலமைச்சர் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்களுடன் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பிடித்த விளையாட்டு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 627 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல அருப்புக்கோட்டை நகராட்சியில் 102 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி வந்ததிலிருந்து முதலமைச்சர் உத்தரவுபடி 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். கடந்த இரு தினங்களுக்கு முன் எதிர்பாராத வகையில் மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர் கட்சிக்காரர்கள் தேர்தலுக்காக பணம் வழங்குகிறார்கள் என விமர்சனம் செய்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் எங்களுடைய முதலமைச்சர் எதையுமே முன்கூட்டியே யோசித்து மக்களுக்கு கிடைக்க வேண்டியதை சரியான நேரத்தில் கிடைக்கச் செய்வதில் வல்லவராக இருக்க கூடியவர்.
மகளிர் உரிமை தொகையை மகளிருக்கு கிடைக்க விடாமல் செய்யக்கூடிய பணிகளை எதிர்க்கட்சிகள் செய்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் போய் தடை ஆணை வழங்கினால் மூன்று மாதத்திற்கு மகளிர் உரிமை தொகை வழங்க முடியாது. அதையெல்லாம் நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். ஆனால் எங்களுடைய முதலமைச்சர் அதையெல்லாம் தாண்டி ஒரு படி முன்னேறி நீங்கள் யோசித்து முடிப்பதற்குள், மொத்தமாக மூன்று மாதத்திற்கு மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்பு நிதி ரூ 2,000 என ஒரே நாளில் ரூ 5,000 அமைச்சர்களுக்கு கூட தெரியாமல் வரவு வைக்கப்பட்டது. காலையில் எழுந்து தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் இந்த மகிழ்ச்சியை தொடர நீங்கள் எப்போதும் நம்முடைய முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.
இதையும் படிங்க: விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?