இரவோடு இரவோக அதிரடி மாற்றம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு...!
கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. ஒரு கோடி புதிய வாக்காளர்களை கட்சியில் இணைப்பது, அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வருவது என திமுகவினர் களப்பணிகளை தீயாய் செய்து வருகின்றனர். மற்றொருபுறம் திமுக தலைமையும் தேர்தல் பரப்புரைக்கான பொறுப்பாளர்களை நியமிப்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது என தீவிரம் காட்டி வருகிறது.
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக சட்ட விதிப்படி, திமுக கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத் திறனாளிகள் அணி தலைவராக ரெ.தங்கம், செயலாளராக டி.எம்.என்.தீபக் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர், என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!