×
 

#BREAKING தொகுதி பங்கீடு... திமுகவில் திடீர் மனமாற்றம்...விடிந்ததுமே அறிவாலயம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொகுதி பங்கீடு குழுவை திமுக தற்போது அமைத்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் காய் நகர்த்தி வருகிறது. 

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மொத்தம் 234 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டது, மீதமுள்ள 61 தொகுதிகள் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக தலா 6 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும் போட்டியிட்டன. பெரும்பாலான சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. திமுக 133 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

இந்த முறை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் முன்பே திமுக கூட்டணிக்குள் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? என்பது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை முன்பே அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது கிடையவே கிடையாது என கட் அண்ட் கறாராக சொல்லிவிட்டார். இதனால் கடும் அப்செட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், 40 தொகுதிகளையாவது கறாராக கேட்டுப் பெற வேண்டும் என தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

மற்றொருபுறம் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கட்டாயம் கேட்டுப்பெறுவோம் என உறுதியாக நிற்கின்றன. விசிக, மதிமுக தங்களது கோரிக்கையை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் கூடுதல் தொகுதிகளை பெற துரை வைகோவும், திருமாவும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் கூட்டணி கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை குறையக்கூடும் எனக்கூறப்படுகிறது. 

இதனிடையே, தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொகுதி பங்கீடு குழுவை திமுக தற்போது அமைத்துள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். இந்த குழு கூட்டணி கட்சிகளுடன் பேசி தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கே.என்.நேரு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இதையும் படிங்க: ததும்பும் தமிழ் பெருமிதம்... திராவிட மாடல் ஆட்சியின் சாதனை...!! புகழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share