×
 

தவறி பாஜக ஆட்சி அமைத்து விட்டால்.. தமிழ்நாட்டில் அகற்றவே முடியாது.! கதறும் திமுக ஆதரவாளர் செந்தில்..!

தனது கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக அமித் ஷா அடித்த மதுரை விசிட், ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் பரபரப்பாக்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த முறை தமிழகம் வந்தபோது அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இரு கட்சியினரும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். தங்கள் கூட்டணிக்கு மேலும் கட்சிகளை கொண்டுவரவும், திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியை களம் இறக்கவும் வியூகங்களை வகுத்து வருகின்றனர். 

இந்நிலையில், மீண்டும் அமித் ஷா தமிழகம் வந்துள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்து முடிந்த ஒரு வாரத்துக்குள், மதுரைக்கு அமித்ஷாவும் வந்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக அமித் ஷா பாமக மற்றும் தவெகவை கூட்டணிக்குள் இணைப்பது தொடர்பான அசைன்மெண்ட்களை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் இல்லாமல், நயினார் நாகேந்திரன் உடன் இணைந்து தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அமித் ஷா எச்சரித்தும் உள்ளார். 

இதையும் படிங்க: மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

தனது கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக அமித் ஷா அடித்த மதுரை விசிட், ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் பரபரப்பாக்கியுள்ளது. சமீபத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயில் இருந்து தமிழகத்தில் வேரூன்றி இருப்பதாக சொல்லும் திமுக வரை அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. குறிப்பாக இதுவரை திமுகவிற்கு சிக்னல் கொடுத்து வந்த தேமுதிகவும், பாமகவும் அமித் ஷா வருகைக்குப் பின்னர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பக்கம் சாய ஆரம்பித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகமும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது. இதெல்லாம் சாத்தியமாகும் பட்சத்தில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான பாஜகவின் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இதனால் அறிவாலயம் அதிர்ச்சியில் இருப்பதோடு, 200 ரூபாய் உடன்பிறப்புகள் சோசியல் மீடியாக்களில் வெளிப்படையாக வாய்விட்டே கதற ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக தீவிர திமுக ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான செந்தில் தனது யூடியூப் சேனலில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர்பாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “ஒருவேளை திமுக தேர்தலில் 10 தொகுதிகளை இழக்க நேரிட்டால், தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைச்சரவையோடு அதிமுக ஆட்சி அமைத்தால், அதன் பிறகு தமிழ்நாட்டை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது. அந்த அளவிற்கு பாஜக தனது கொடூரமான கரங்களை தமிழ்நாட்டில் விரித்துவிடும்” எனக்கூறியுள்ளார். 

இந்த வீடியோவை அதிக அளவில் சோசியல் மீடியாவில்ஷேர் செய்து வரும் பாஜகவினர் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்பதாலேயே திமுக உடன்பிறப்புகள் இப்படி கதறுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

பாஜக -அதிமுக கூட்டணி ஆட்சி!

கதறும் அறிவாலய அண்டா!
😂😂😂😂😂😂 pic.twitter.com/FBgZqj0aGw

— Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) (@BS_Prasad) June 9, 2025

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் நறுக் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share