×
 

விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

தென் மாவட்டங்களில் வேரூன்றத் துடிக்கும் பாஜகவுக்கு அமைச்சர்களின் தொகுதிகளையே களமாக கொடுத்திருப்பது, அந்த தொகுதிகளில் கடும் போட்டியை உருவாக்கும் என்றே தெரிகிறது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் தகிக்க தொடங்கி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு ஐந்து முனைப்போட்டி இந்த தேர்தலில் நிலவுகிறது. ஆளும் திமுக கூட்டணி எதிர்க்கட்சியான அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் சசிகலா அணி என ஐந்து அணிகள் இந்த தேர்தலில் களம் காண்கின்றன.

வர உள்ள சட்டமன்ற தேர்தல் களத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முந்தி செயல்பட்டு வருகிறார். அண்ணா அறிவாலயத்திற்கு வாங்க, வாங்க என கூட்டணி கட்சிகளை அழைத்து அழைத்தே திமுக தரப்பு டயர்டு ஆகியிருக்கும் அதேசமயத்தில், போட்ட ஸ்கெட்சை சிறிதும் பிசிறின்றி ஒரே இரவில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வேலைகளை ஆரம்பித்த திமுக இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை முழுமையாக முடிக்கவில்லை. இன்னும் தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி? வேட்பாளர் தேர்வு என பல வேலைகள் இருக்கிறது. ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்தோம் என தேமுதிக லெப்டிலும், தவெகை ரைட்டிலும் உதறிவிட்ட எடப்பாடி பழனிசாமி தேசிய கட்சியான பாஜக தொடங்கி மாநில கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புரட்சி பாரதம், புநீக ஆகிய கட்சிகளைக் கொண்டு தொகுதி பங்கீட்டை சுமூக முடித்துவிட்டார். பாஜகவுக்கு 27 பாமகவுக்கு 17, அம்முகவுக்கு 11 என கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டதோடு எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதையும் அறிவித்து விட்டார்.

இதையும் படிங்க: "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

மேலும் அதிமுகவின் 23 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்ட எடப்பாடி பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார். ஆனால் எதிர் முகாமில் இருக்கும் திமுக ஆட்சியை தொடரும் அமைப்பில் பல்வேறு சமரசங்களுக்கு இடம் கொடுத்து தான் வருகிறது. அதுமட்டுமின்றி அதிமுக கூட்டணி கட்சிகளை அக்னீ பரீட்சையில் இறக்கிவிட்டிருப்பதாகவும், குறிப்பாக பாஜகவை சிட்டிங் அமைச்சர்களுடன் மோதவிட்டிருப்பதாகவும் பரப்பப்படும் வதந்திகள் அனைத்துமே எடப்பாடியாரின் தேர்தல் வியூகத்தைக் கண்டு திகைத்துப்போன உ.பி.க்களின் பொய் பிரசாரம் என்பதும் தெரியவந்துள்ளது. 

பாஜகவுக்கு, டாப் அமைச்சர்களின் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பனின் திருப்பத்தூர், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம், பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசரின் ஆவடி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளுடன், சபாநாயகர் அப்பாவு பிரதிநிதித்துவப்படுத்தும் ராதாபுரம் தொகுதியும் பா.ஜ.க.வின் வசம் சென்றுள்ளது.

 அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் வேரூன்றத் துடிக்கும் பாஜகவுக்கு அமைச்சர்களின் தொகுதிகளையே களமாக கொடுத்திருப்பது, அந்த தொகுதிகளில் கடும் போட்டியை உருவாக்கும் என்றே தெரிகிறது. அமைச்சர்களின் தொகுதிகளில் அவர்களின் நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் செல்வாக்கை நேரடியாகச் சோதிக்கும் விதமாக இந்தக் கூட்டணிப் பங்கீடு அமைந்துள்ளது. இதனால் ஆளும் கட்சித் தரப்பில் அமைச்சர்கள் தங்கள் தொகுதியைத் தக்கவைக்க முழு பலத்தையும் பிரயோகிப்பார்கள் என்றாலும், கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த வாக்குகள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக முகாமில் நிலவுகிறது. 

இதையும் படிங்க: சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share