×
 

விஜய்க்கு ஆதரவா.? கட்சித் தாவல் சட்டம் பாயணும்..! போர்க்கொடி தூக்கிய EPS தரப்பு..!!

மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என இபிஎஸ் தரப்பினர் சபாநாயகரிடம் வாதிட்டனர்.

தமிழ்நாடு அரசியலில் மீண்டும் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய மூன்று எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்து இருந்தார். இந்த நிகழ்வு அதிமுகவுக்கு கணிசமான பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழக வெற்றிக் கழகம் தரப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த கே. மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த பி. சத்தியபாமா ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் அதிமுகவின் கிளர்ச்சி அணியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினருடன் இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த மூவரும் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். சபாநாயகர் உடனடியாக அந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டார். இந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதன் மூலம் மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியாகின. இதனால் அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை..! EPS கடும் குற்றச்சாட்டு..!

இதற்கிடையில் சபாநாயகர் பிரபாகரை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு ஆதரவு தெரிவித்த 25 பேர் மீதும் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்து உள்ளனர். கட்சி தாவல் புகார் நிலுவையில் இருப்பவர்களின் ராஜினாமாவை ஏற்க கூடாது என்றும் வாதிட்டுள்ளனர். சபாநாயகர் பிரபாகரை சந்தித்து ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share