விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
இந்த விவகாரத்தில் விவசாய சங்கங்கள் மட்டுமின்றி, திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து தவெகவை விமர்சித்து வருகின்றன.
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்து, வருகின்ற 14ஆம் தேதி சென்னை நீங்கலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
முதல்வர் விஜய் மே 25, 2026 அன்று கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தொடர்பாக தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார். முதற்கட்டமாக ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. ரூ,50,000 வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசுக்கு சுமார் ரூ.2,044.46 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும், சுமார் 14.23 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.75,000 வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஜூன் மாதத்தில் முதல்வர் விஜய் அறிவித்தார். ஆனால் தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை வந்த அமித் ஷா..! விமான நிலையத்தில் நேரில் சந்தித்த இபிஎஸ்..!பரபரக்கும் தமிழக அரசியல்.!
இந்த விவகாரத்தில் விவசாய சங்கங்கள் மட்டுமின்றி, திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து தவெகவை விமர்சித்து வருகின்றன. வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தவெக அரசு வெளியிட வேண்டும் என்று ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். அப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
தற்போது அந்தக் கோரிக்கையை மையமாக வைத்து போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது, அதேபோல மேகதாது பிரச்சினையில் மெத்தனம் காட்டி வருகிறது தவெக அரசு என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் பிரச்சினையை உரிய முறையில் தீர்க்காத தவெக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
வருகின்ற 14ஆம் தேதி நடைபெறக்கூடிய இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சையில் நடைபெறக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்கிறார்.
அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ். வேன்மணி தேனி மாவட்டத்திலும், முன்னாள் அமைச்சர் தங்கமணி சேலம் மாவட்டத்திலும், முன்னாள் அமைச்சர் கதம்பூர் விஸ்வநாதன் ராமநாதபுரம் மாவட்டத்திலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு வந்து தலைமை ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! அடுத்த நொடியே மைக் ஆஃப்... சட்டசபையில் பரபரப்பு