தொடர்ந்து ஒதுக்கப்படும் EPS..! நமது அம்மா நாளிதழிலிருந்து எடப்பாடியின் பெயர் நீக்கம்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!!
நமது அம்மா நாளிதழில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.
நமது அம்மா நாளிதழில் நிறுவனர் என்ற இடத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் நீக்கப்பட்டு வேலுமணியின் பெயர் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் நீண்ட காலமாக நிலவி வரும் உள்கட்சி பதற்றம் மே 2026-ல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு முக்கிய தலைவர்களை நீக்கியதைத் தொடர்ந்து, கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான நமது அம்மா நாளிதழ் ஆகியவை ஈபிஎஸ்-க்கு எதிரான நிலைப்பாட்டுக்கு மாறியுள்ளன. இந்த மாற்றம் அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியது. இந்த நடவடிக்கை தமிழக சட்டமன்ற தர வாக்கெடுப்பின்போது விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்ததால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், ஈபிஎஸ்-க்கு 22 எம்எல்ஏக்களும், எதிர்தரப்புக்கு 25 எம்எல்ஏக்களும் ஆதரவு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் பின்னணியில், நமது அம்மா நாளிதழில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஈபிஎஸ் ஆதரவு செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த நாளிதழ், திடீரென எதிர்தரப்பு ஆதரவு நிலைப்பாட்டுக்கு தாவியது.
இதையும் படிங்க: அதிமுக Ex. அமைச்சர்கள் உருவப்படங்களுக்கு சாணி கரைசல்... நெல்லையில் EPS அணியினர் ஆர்ப்பாட்டம்..!
நாளிதழின் முகப்பு பக்கத்தில் நிறுவனர் என்ற இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு வேலுமணியின் பெயர் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!