×
 

த்ரிஷா பத்தி நயினார் பேசியதை தப்புன்னு சொல்ல மாட்டேன்... எரியும் கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றிய ஜி.கே.வாசன்...!

நடிகை குறித்து  நயினார் நாகேந்திரன் சொன்னதை தப்பு என்றும் சொல்ல மாட்டேன், அவர்கள் அது அவருடைய எண்ணமாக இருக்கலாம் ,பாணியாக இருக்கலாம் எனவும் இதில் கருத்து கூறுவது தவறாக இருக்கும்  என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கோவை தனியார் திருமண மண்டபத்தில் , கொங்கு மண்டல தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின்  தலைவர் 
ஜி. கே. வாசன் கலந்து கொண்டார். அப்போது ஜி.கே.வாசன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பிப்.14ம் தேதி கோவை குண்டு வெடிப்பு நாள், உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி என தெரிவித்து கொண்டார். சட்டமன்ற தேர்தலில் த.மா.கா வெற்றியை உறுதி செய்ய கொங்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகின்றது. 

சட்டமன்றத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்து உறுப்பினர்கள் சென்று குரல் கொடுக்க வேண்டும், கூட்டணி கட்சிகளின் வெற்றியை கடின உழைப்பின் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் கொங்குமண்டலத்தில் வாய்ப்புகளை பெற வேண்டும் என விரும்புபவர்கள் விருப்ப விண்ணப்படிவங்களை பதவு செய்யலாம் என சொல்லி இருக்கின்றோம். இந்த கூட்டத்தில் விருப்பமனுக்கள் கொடுக்கப்படுகின்றது.

தமிழகத்தில் தே.ஜ.கூ அதிமுக தலைமைநில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது எனவும், இதற்கு திமுக மக்கள் விரோத போக்குதான் காரணம் என தெரிவித்தார்.
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, எனவும் தொடர்த்து  பொய்வாக்குறுதிகளை  கொடுப்பதை மக்கள் ஏறகவில்லை எனவும் ,தமிழகத்தில் 
சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக பாஜகவை வேவு பார்க்கும் டெல்லி SPY!! தாமரை மலராதது ஏன்? கோட்டை விடுவது யார்? அலசல்!

தென் மாநிலங்களில் தமிழகத்தில்தான்  சட்டம் ஒழுங்கு பாதிப்பு அதிகம் என தெரிவித்த அவர், இதை கட்டுப்படுத்த முடியாத அரசாக இந்த அரசு இருப்பது வெட்க்கேடானது எனவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் தமிழக முதல்வர் மகளிருக்காக ஒரு தொகை வங்கியில் போடப்பட்டு இருக்கின்றது என அறிவித்துள்ளார், உரிமை தொகை மாதம் மாதம் கொடுப்பதில் தே.ஜ.க கட்சிகள் எதிரிகள் அல்ல , அதிமுக கூட தேர்தல் அறிக்கையில் 2000 ரூபாய் கொடுப்பதாக  சொல்லி இருக்கின்றது. தேர்தல் ஜூரம் காரணமாக திமுக 5000 கொடுப்பதாக
அறிவத்து இருப்பது தமிழகத்தின் தாய்மார்களை ஏமாற்றும் செயல்,
பணம் ஒரு கையில் கொடுத்தால்  மறு கையில் டாஸ்மாக் சென்று விடுகிறது,
மக்கள் நூதனமாக ஏமாறுவார்கள் என நினைப்பது வருத்ததிற்குரியது எனவும் தெரிவித்தார்.

பல்வேறு திட்டங்களுக்கு நிதி இல்லை என சொன்னார்கள், இப்போது வாக்குகள்  பெற அழுத்தம் கொடுப்பதாகவும், மகளிர் ஏமாற்றுவார்கள் என பணத்தை அறிவிக்கின்றனர் எனவும் , ஆனால் 
வாக்காளர்கள் உள்நோக்கத்தை புரிந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக செயல்படுத்த வில்லை என  தெரிவித்த அவர், கோவையில் 
3 மாத காலமாகியும் மின்சார தட்கலுக்கு இணைப்பு வழங்க வில்லை, அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை நிறைவேற்ற வில்லை, அரசு தேர்வுகள் முறையாக நடத்த வேண்டும், கோவை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தே.ஜ.கூ மேலும் கட்சிகள் சேரும், தேர்தல் அறவிப்பிற்கு இன்னும் சில  நாட்கள் இருக்கின்றது. அதற்குள் கூட்டணி மேலும் வலுப்பெறும் எனவும், அதன் பின்பு கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள், வேட்பாளர்கள், தொகுதிகள் அறிவிப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 4 மண்டலத்தில்  இருந்தும் த.மா.கா இருந்தும் குரல் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது,அதற்கு ஏற்ப  வியூகங்கள் அமையும் எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் தொடர்ந்து தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுவது  குறித்த கேள்விக்கு, ஒரு உயிர் போய் இருக்கிறது ,அது வருத்தமான செய்தி , அதற்கு உண்டான முழு பொறுப்பையும், அரசாங்கம், பாதுகாப்பு, கூட்டம் நடத்திய கட்சி இவர்கள் எல்லாம் ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வரும் நாட்களில் இது போன்ற நிலை இல்லாமல் இருப்பதை உறுதி படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 

பொதுவாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மரியாதைக்கு உரிய கட்சிகளாக அவர்கள் அளவிற்கு ஏறக மிக மரியாதையாக நடத்தி கொண்டு இருக்கின்றனர். இதில் வாக்கு சதவீதம் என்பது வராது என தெரிவித்த அவர், மக்கள் பணி, இயக்கப்பணி மட்டுமே முக்கியம் எனவும் தெரிவித்தார். இதுதான் பொதுவான கருத்து எனவும் தெரிவித்தார். தே.ஜ.கூ அணிதான் பிரகாசமான அணி எனவும் தெரிவித்த அவர், தேர்தலில் பல பெரிய கட்சிகள் வெற்றி பெறாமல் போயிருக்கின்றது எனவும் தெரிவித்தார். 

தவெக தலைவர் விஜயை  பிரபல நடிகையுடன் இணைத்து பா.ஜ.க மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு கட்சித் தலைவர்களுக்கும்  ஒரு கருத்து இருக்கிறது, ஒரு பாணி இருக்கிறது , தனிப்பட்ட முறையில் யார் பேசியதையும் நான் குற்றம் சொல்ல முடியாது என தெரிவித்தார். யார் தங்களுடைய நிலையை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்கள் அதை முறையாக சரிபடுத்துவார்கள் எனவும் , இதில் நான் போய் ஆஜராக முடியாது எனவும் தெரிவித்தார். அவர் சொன்னதை தப்பு என்றும் சொல்ல மாட்டேன், அது அவருடைய எண்ணமாக இருக்கலாம் ,பாணியாக இருக்கலாம் எனவும் 
ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக வசூல் வேட்டை! காங்கிரசை விட 10 மடங்கு அதிக நிதி வசூல்! தேர்தல் அறக்கட்டளை மூலம் வாரி சுருட்டியது இவ்ளோவா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share