×
 

சென்னை GH-க்கு வந்த குட் நியூஸ்! ஹூண்டாய் நிறுவனம் கொடுத்த 169 மாடர்ன் மெடிக்கல் எக்யூப்மென்ட்ஸ்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர அறுவை சிகிச்சை பிரிவை மேம்படுத்த, ஹூண்டாய் ஃபவுண்டேஷன் சார்பில் 169 நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சென்னையின் மிக முக்கிய மருத்துவக் கோட்டையாக விளங்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர அறுவை சிகிச்சை பிரிவின் (Surgical ICU) உள்கட்டமைப்பைச் சர்வதேசத் தரத்திற்கு அசுர வேகத்தில் மேம்படுத்தும் நோக்கில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) நிறுவனம் தங்களின் பங்களிப்பாக 169 அதிநவீன மருத்துவ உபகரணங்களை இன்று வழங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவலின்படி, நடைபெற்ற இந்த உன்னத மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிகழ்வில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர் திரு. கோபாலகிருஷ்ணன் சி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு, இந்த 169 நவீன மருத்துவ உபகரணங்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் கே. சாந்தாராம் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

மாண்புமிகு தவெக அரசின் மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலாளர் டாக்டர் டாரெஸ் அகமது, இ.ஆ.ப. ஆகியோர் முன்னிலையில் இந்த அதிநவீன உபகரணங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டன. லஞ்சமற்ற வெளிப்படையான பொது மருத்துவச் சேவைகளை ஏழை எளிய மக்களுக்கு அசுர வேகத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தவெக அரசு மிகத் தீவிரமாக உள்ள சூழலில், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மருத்துவ உள்கட்டமைப்பு உதவி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார ஏழை எளிய நோயாளிகளுக்கு மாபெரும்  வரப்பிரசாதமாக அமையும் என்று அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

இதையும் படிங்க: நலம் AI APP..! வீட்டிலிருந்தே முன்பதிவு..! செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் அருண்ராஜ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share